• Sep 20 2024

விஜய் சேதுபதி மீது கிரிமினல் வழக்கு.. அதிரடி உத்தரவு பிறப்பித்த உச்ச நீதிமன்றம்.. நடந்தது என்ன..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகத் திகழ்ந்து வருபவர் விஜய் சேதுபதி. இவர் சினிமாவில் நுழைந்து குறுகிய காலத்திலேயே தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்தவர். அதுமட்டுமல்லாது இவருக்கென்று ஏராளமான ரசிகர்கள் கூட்டமும் உண்டு. படங்களில் ஹீரோவாக நடித்து வந்த இவர் சமீபகாலமாக வில்லனாகவும் அசத்தி வருகின்றார், 


இந்நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் 2 ஆம் தேதி விஜய் சேதுபதியும், சைதாப்பேட்டையை சேர்ந்த துணை நடிகர் மகாகாந்தி என்பவரும் பெங்களூரு விமான நிலையத்தில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதாக ஒரு தகவல் வெளியாகி இருந்தது.


இதனைத் தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக நடிகர் மாககாந்தி,  விஜய் சேதுபதி தன்னை அவதூறாக பேசிவிட்டு, தாக்கியதாக கூறி அவர் மீது கிரிமினல் வழக்கு மற்றும் அவதூறு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனு ஒன்றினைத் தாக்கல் செய்தார்.


மகாகாந்தியின் இந்த மனுவை விசாரித்த சென்னை சைதப்பேட்டை 9வது குற்றவியல் நீதிமன்றம், இந்த வழக்கில் விஜய் சேதுபதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என சம்மன் ஒன்றை அனுப்பியது. இதனைத் தொடர்ந்து பின்னர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நடக்கும் விசாரணைக்கு தடை கோரியும், தன் மீதான வழக்குகளை ரத்து செய்யக் கோரியும் விஜய்சேதுபதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றினைத் தொடர்ந்திருந்தார்.

இதற்கு உயர்நீதிமன்றம், நடிகர் விஜய் சேதுபதிக்கு எதிரான கிரிமினல் அவதூறு வழக்கு மீதான விசாரணையை நடத்தலாம். ஆனால் அந்த விசாரணையை 3 மாதத்தில் நடத்தி முடிக்க வேண்டும் என கடந்த ஜூலை 29இல் உத்தரவிட்டது.  


மேலும் பெங்களூரு விமான நிலையத்தில் இருவரும் பரஸ்பரம் தாக்கி கொண்ட விவகாரம் தொடர்பானது, சென்னை விசாரணை எல்லைக்கு உட்பட்டது அல்ல. இதனால் இங்கு வழக்கு தொடர இயலாது என தெரிவித்து விஜய் சேதுபதிக்கு எதிரான புகாரை ரத்து செய்தும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. 

இதனையடுத்து சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் விஜய் சேதுபதிக்கு எதிரான கிரிமினல் அவதூறு வழக்கு விசாரணை மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதன் பின்னரும் அந்த கிரிமினல் அவதூறு வழக்கை ரத்து செய்யக் கோரி விஜய் சேதுபதி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். 

நேற்றைய தினம் இந்த மனு மீதான விசாரணை நடைபெற்றது. அப்போது தங்களிடையே உள்ள பிரச்னைகளை இரு தரப்பும் பரஸ்பரம் பேசி தீர்வு காண வேண்டும் எனக் கூறி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement

Advertisement