2023ம் ஆண்டுக்கான 95வது ஆஸ்கர் விருது விழா அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறுகிறது.இன்றைய ஆஸ்கர் விருது விழாவில் தீபிகா படுகோன் கலந்துகொண்டார்.தொடர்ந்து ராஜமெளலியின் ஆர்ஆர்ஆர் படத்தையும் அதில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடல் குறித்தும் அறிமுகம் கொடுத்தார்.
முக்கியமாக இந்தப் பாடலின் கோரியோகிரபி, யூடியூப்பில் வந்த வீவ்ஸ், ரீல்ஸில் ரசிகர்கள் ஆடிப்பாடியது என வரிசையாக அடுக்கினர். தீபிகா படுகோன் ஆர்ஆர்ஆர் பற்றி பேசும் போது ரசிகர்கள் அவரை பேசவிடாமல் ஆரவாரம் செய்தார்கள்.
அதன்பின்னர் 'நாட்டு நாட்டு' பாடல் ஆஸ்கர் மேடையில் அரங்கேற்றப்பட்டது. ராகுல் சிப்லிகஞ்ச், கால பைரவா இருவரும் நாட்டு நாட்டு பாடலை லைவ்வாக பாடி அசத்தினர். அதற்கு நடனக் கலைஞர்கள் ஆட்டம் போட்டு அசத்தியது ஒட்டுமொத்த ரசிகர்களையும் உற்சாகத்தில் ஆழ்த்தியது.
நாட்டு நாட்டு பாடல் பெர்ஃபாமன்ஸ் முடிந்ததும் ஒட்டுமொத்த பிரபலங்களும் எழுந்து நின்று கைகள் தட்டி ஆர்ப்பரித்தனர். இதனை அடுத்து நாட்டு நாட்டு பாடல் ஒஸ்கார் விருதினைப் பெற்றதோடு இதனை இசையமைப்பாளர் கீரவாணி பெற்றுக் கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!