• Sep 20 2024

மகளிற்கு வாழ்த்து தெரிவித்த ரோஜா... அதுவும் இப்படி ஒரு புகைப்படம் மூலமாக... அப்படி என்னதான் விசேஷம்...!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

இந்திய சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை  ரோஜா. இவரின் நடிப்பினையும் தாண்டி அழகில் மயங்காத ரசிகர்களே இல்லை என்று கூறலாம். அதன் காரணமாகவே இவர் 'நவரச நாயகி' என சிறப்பாகப் போற்றப்பட்டு வந்தார்.


இவர் தமிழ் சினிமாவில் 1992-ஆம் ஆண்டு வெளிவந்த 'செம்பருத்தி' என்ற படத்தில் பிரசாத்துக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி இருந்தார்.முதல் படமே இவருக்கு பெரியளவில் வெற்றியைக் கொடுத்தது.

அதனைத் தொடர்ந்து 'சூரியன், உழைப்பாளி, அதிரடி படை, வீரா, அசுரன் மக்கள், ஆட்சி ராஜாலி, அடிமை சங்கிலி, ஊட்டி' போன்ற பல படங்களில் நடித்து வெற்றி நாயகியாக வலம் வந்தார்.


நடிகை ரோஜா தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். அதுமட்டுமல்லாது தற்போது ஆந்திராவில் சட்டமன்ற உறுப்பினராகவும் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சராகவும் இருந்து வருகின்றார்.

இவ்வாறாக பல துறைகளிலும் கால் பதித்து தனது திறமையை நிலை நாட்டி வருகின்ற ரோஜா படங்கள் நடித்துக் கொண்டிருக்கும் போதே இயக்குநர் செல்வமணியை காதலித்து 2002-ஆம் ஆண்டில் திருமணமும் செய்து செய்தார்.


தற்போது இந்தத் தம்பதியினருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளார்கள். இவர்கள் இருவரின் புகைப்படங்களையும் ரோஜா சமூக வலைதளங்களில் அடிக்கடி பதிவு செய்த வண்ணம் இருப்பார்.

மேலும் ரோஜாவின் மகன் அன்ஷு மாலிகா இளம் வயதிலேயே தனது திறமையை வெளிப்படுத்தி சாதனை பல செய்துள்ளார். மேலும் அவர் வெப் டெவலப்பர் மற்றும் கண்டெண்ட் ரைட்டர் ஆக தன்னை மெருகேற்றியும் வருகிறார்.


அதேபோன்று ரோஜாவின் மகள் எழுதிய  'தி ஃப்ளேம் இன் மை ஹார்ட்' என்ற புத்தகம் ஆனது சமீபத்தில் வெளியானது. இதற்காக சிறந்த எழுத்தாளருக்கான விருது ரோஜாவின் மகளுக்கு கிடைத்துள்ளது. விருது வாங்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் ரோஜா தனது இன்ஸ்டா ஸ்டோரியில் ஏற்கெனவே பதிவு செய்துள்ளார்.


இந்நிலையில் இன்றைய தினம் ரோஜாவின் மகள் அஞ்சு தனது பிறந்தநாளினைக் கொண்டாடுகின்றார். தனது மகளிற்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் நடிகை ரோஜாவும் அஞ்சுவின் சிறு வயதுப் புகைப்படங்களை பதிவிட்டு அதன் மூலமாக தனது வாழ்த்தினைத் தெரிவித்திருக்கின்றார்.


இவரின் இப்பதிவிற்கு ரசிகர்கள் பலரும் தமது வாழ்த்துக்களை கமெண்டுகளின் மூலமாக தெரிவித்து வருகின்றனர். 

Advertisement

Advertisement