பாலிவுட் திரையுலகில் பலரது மனம் கவர்ந்த நட்சத்திரத் தம்பதிகளில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர்கள் ஐஸ்வர்யா ராய்-அபிஷேக் பச்சன் தம்பதிகள் ஆவார். ஐஸ்வர்யா ராய் இவர் கடந்த காலத்தில் நீதா முகேஷ் அம்பானி கலாச்சார மைய தொடக்கவிழாவில் மகள் ஆராத்யா பச்சனுடன் வந்து கலந்து கொண்டு இருந்தார்.
அது குறித்த வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகி இருந்தது. அதாவது புரோ கபடி லீக் போட்டி ஒன்றில் தனது கணவர் அபிஷேக் பச்சனின் ஜெய்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி விளையாடும் போட்டியைக் காண வந்திருந்தார் ஐஸ்வர்யா ராய். அவருடன் அபிஷேக் பச்சன், மகள் ஆராத்யா மற்றும் அபிஷேக்கின் சகோதரியின் மகள் நவ்யா நந்தா ஆகியோரும் உடனிருந்தனர்.
அந்த சமயத்தில் அபிஷேக் பச்சன் ஐஸ்வர்யா ராயிடம் ஏதோ கூற அதற்கு ஐஸ்வர்யா கோபத்தை வெளிப்படுத்தும் விதமாக கண்களை உருட்டி பார்க்கிறார். மேலும் அந்த நேரத்தில் அவர் உறவினர் மீதும் கோபப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் சமூக வலைதளங்களில் இருவருக்கும் இடையே பிளவு ஏற்பட்டு உள்ளது. அதுமட்டுமல்லாது அவர்கள் விவாகரத்து செய்யப் போகிறார்கள் என்ற ஊகங்கள் பேசு பொருளாகத் தொடங்கியது. இருப்பினும், பின்னர் அது உண்மையல்ல வதந்தி என்றும் கூறப்படுகின்றது.
Listen News!