• Sep 20 2024

கதிரால் குணசேகரனின் கழுத்திற்கு வரப்போகும் கத்தி... நினைத்து நினைத்துக் கலங்கும் ஜனனி... அப்பத்தா எடுக்கும் முடிவு என்ன..? பரபரப்பான 'Ethirneechal' Episode..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பாகும் 'எதிர்நீச்சல்' சீரியலானது டி.ஆர்.பி ரேட்டிங்கில் முன்னணியில் இருப்பது மட்டுமல்லாது நாளுக்கு நாள் விறுவிறுப்பான கதைக்களத்தைக் கொண்டு அதிரடித் திருப்பத்துடன் நகர்ந்த வண்ணம் இருக்கின்றது.

இந்நிலையில் நேற்றைய எபிசோட்டில் என்ன நிகழ்ந்துள்ளது என்பதை பார்ப்போம். அதில் குணசேகரன் அப்பத்தாவை மிரட்டி கையெழுத்து வாங்கி ரூமுக்குள் அடைத்து வைத்திருக்கின்றார். இதனைப் பார்த்த நந்தினி "அப்பத்தாவுக்கு சாப்பாடு கொடுத்து குளிக்க வைத்து டாக்டரிடம் கூட்டி போக வேண்டும்" எனக் கூறுகின்றார்.

பதிலுக்கு குணசேகரன் அதெல்லாம் ஒண்ணும் தேவை இல்லை. இன்னும் கொஞ்ச நேரத்தில் உன்னோட புருஷன் வந்து விடுவான். அவனை நீ என் பக்கம் திருப்பிவிட யோசி போ எனக் கூறுகின்றார்.


அதற்கு நந்தினி, என்னோட புருஷனால தான் உங்க கழுத்துக்கு கத்தி வரப்போகுது என்கிறார். பின்னர் குணசேகரனுக்கு கதிரிடமிருந்து போன் வருகின்றது. அதில் "ஒரு பெரிய தப்பு நடந்து விட்டது. ஜீவானந்தத்தை சுட சொன்னா கிள்ளிவளவன் அவனோட பொண்டாட்டிய சுட்டுட்டான்" என்கிறார். 

இதனைக் கேட்ட குணசேகரன் உடனே "என்னது அவனுக்கு குடும்பம் இருக்கா? என ஆச்சர்யம் அடைகின்றார். பதிலுக்கு கதிர் "குடும்பத்தை இந்த உலகமே தெரியாமல் மறைத்து வைத்துள்ளான். ஜீவானந்தம் பொண்டாட்டிக்கு என்ன ஆச்சுன்னு தெரியல. என்னை இழுத்து வந்துட்டானுங்க" என்கிறார். அதற்கு குணசேகரன் சரி அதுவும் ஒரு வகையில் நல்லது தான். யாரும் உன்னை பார்க்கவில்லை தானே எனக் கதிரிடம் கேட்கிறார்.


பதிலுக்கு கதிர், யாரும் பார்க்கல, ஆனால் அந்த ஜனனி வந்து உள்ள பூந்து எல்லாத்தையும் சொதப்பிட்டா. இருந்தாலும் அவ என்னை பார்க்கல என்கிறார். உடனே குணசேகரன் "அவ ஏன் அங்க வந்தா? இங்க வந்து யார்கிட்டேயும் எதையும் சொல்லாதே. ஆடிட்டர், வக்கீலை வைத்து அப்பத்தாகிட்ட இருந்து கையெழுத்து வாங்கிட்டேன். நீ நல்ல படியாக வீட்டுக்கு வா என்கிறார்.


மறுபுறம் ஜனனி ஜீவானந்தம் பற்றியும் அவரது குடும்பம் பற்றியும், மனைவியின் இறப்பு பற்றியும் நினைத்துக் கவலைப்பட்ட வண்ணம் காரில் வந்து கொண்டிருக்கின்றார். அப்போது குணசேகரனிற்கு கால் பண்ணிய வக்கீல் ஜீவானந்தம் மீது கேஸ் போட்டதை பற்றி கூறுகின்றார். அத்தோடு அப்பத்தா இங்க வந்து ஜீவானந்தம்  நல்லவன் என அவனுக்கு சப்போர்ட்டா பேசினா அவ்வளவு தான் எனவும் வக்கீல் குணசேகரனை எச்சரிக்கின்றார்.

பின்னர் வீட்டிற்கு வந்த கதிரிடம் நந்தினி "எங்க போயிட்டு வர்றீங்க. நீங்க முழுசா வருவீங்களா இல்லையா என தெரியாம இரண்டு நாளா பயந்துகிட்டு இருந்தேன். உங்க அண்ணன் கையை ஓங்கிட்டு வராரு. அதுமட்டுமில்ல உங்கள வேட்டை நாய்னு சொன்னாரு. அவருக்கு உங்க மேல பாசம் எல்லாம் கிடையாது. அவர் என்ன எவ்வளவு அசிங்கமா பேசுனாரு. நீங்க இருக்கும் போதே அவர் அப்படி பேசுனாருன்னா அப்போ உங்களுக்கு என்ன மரியாதை" எனக் கூறிப் புலம்புகின்றார்.


மேலும் "நான் நினைச்சு இருந்தா அப்பவே போலீஸ் ஸ்டேஷன் போயிருப்பேன். நீங்க வந்து எனக்காக பேசுவீங்கன்னு தான் காத்துக்கிட்டு இருந்தேன். உங்களோட கொஞ்ச வருஷம் வாழ்ந்து இருக்கேன். ஒரு ஓரத்திலாவது உறுத்தல் இல்லையா. எல்லாத்தையும் விட்டு விடலாம், ஆனால் நீங்க பொணமா தான் வீட்டுக்கு வருவீங்கன்னு சொன்னாரு. எனக்கு எப்படி இருந்து இருக்கும். உங்களுக்கு வலிக்குமா என தெரியல ஆனா எனக்கு வலிச்சுது. பொணமா வருவீங்கன்னு சொல்லற அளவுக்கு எங்க போனீங்கன்னு சொல்லுங்க" எனக் கதிரிடம் கண் கலங்கியவாறு கேட்கின்றார் நந்தினி. 

இதனைக் கேட்ட கதிர் கோபத்தில் முறைத்து கொண்டே குணசேகரனிடம் சென்று என்ன அண்ண,  என்ன சொன்னீங்க அவள, கேக்குறேன்ல. அடிக்க போனீங்களா" என குணசேகரனை அதட்டிக் கேட்கின்றார். இதனைப் பார்த்ததும் அங்கிருந்தவர்கள் அனைவரும் அதிர்ச்சியடைகின்றனர். இவ்வாறாக இந்த எபிசோட் அமைந்துள்ளது.

Advertisement

Advertisement