விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் ஈரமான் ரோஜாவே சீசன் 2.முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இந்த தொடரின் இரண்டாவது பாகம் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலானது அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பை நாளுக்கு நாள் தூண்டிய வண்ணம் தான் இருக்கின்றது.
இந்நிலையில் தற்போது வீடியோ ஒன்று வெளியாகி இருக்கின்றது. அதில் ஜீவாவிடம் வந்த ப்ரியா "நீங்க எங்கூட தனிக்குடித்தனம் வாறீங்களா, இல்லேன்னலால் எனக்கு டிவோர்ஸ் கொடுக்கப் போறீங்களா, என்னோட பீலிங்க்ஸை புரிஞ்சுக்கத் தெரியாத ஒருவருடன் என் வாழ்க்கையை வாழ்ந்து நான் வீணடிக்க விரும்பல" எனக் கூறி விவாகரத்துப் பத்திரிகையை நீட்டுகின்றார்.
அதுமட்டுமல்லாது வீட்டு ஒப்பந்த பத்திரிகையையும் கொடுத்து என்னுடன் வாழ விரும்பினால் இதில் கையெழுத்து போடுங்க. என் கூட வாழ விருப்பம் இல்லாட்டில் இந்த விவாகரத்துப் பத்திரிகையில் கையெழுத்துப் போடுங்க எனக் கூறுகின்றார்.
இவ்வாறாக இந்தப் ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றது.
Listen News!