விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகின்ற ஒரு தொடர் தான் 'காற்றுக்கென்ன வேலி'. இந்த சீரியல் முழுக்க முழுக்க கல்லூரியை மையப்படுத்தி உருவாக்கப்பட்டு வருகிறது. அத்தோடு இந்த சீரியலில் அடிக்கடி பரபரப்பு திருப்பங்களும் நடைபெற்ற வண்ணம் இருக்கின்றது.
இந்நிலையில் தற்போது ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றது. அதில் வெண்ணிலா சூர்யாவின் காரை நடு ரோட்டில் மறித்து நிறுத்துகின்றார். உடனே சூர்யா கீழே இறங்கி "உனக்கு என் கூட என்ன பேச்சு வேண்டிக் கிடக்கு" எனக் கேட்கின்றார்.
அதற்கு வெண்ணிலா "ஜூலை 10 உங்களுக்கு கல்யாணமாமே, வாழ்த்துக்கள்" எனக் கூறுகின்றார். அதற்கு சூர்யா "ஷிவானி கழுத்தில் தாலி கட்டுற கடைசி நிமிஷம் வரைக்கும் நான் உங்களுக்காக காத்திட்டு இருப்பன்" நான் வேணும் என்று நினைச்சால் வாங்க, அப்பிடி இல்லை உங்க கழுத்தில இருக்கிறது வெறும் பாஷன் கயிறாக நினைச்சால் அதுக்கு அப்புறம் உங்க இஷ்டம்" என்கிறார்.
மேலும் "என் அருமை தெரிந்த பொண்ணு, எனக்காக காத்திட்டு இருக்கும் போது நான் ஏன் என்னைப் பற்றிய அருமை தெரியாதவங்களுக்காக காத்திட்டு இருக்கணும்" என்கிறார்" உடனே வெண்ணிலா அங்கிருந்து விலகி செல்கின்றார்.
Listen News!