• Sep 20 2024

`கல்யாணமான இரண்டே மாதத்தில் பிரிவு எதற்கு?'- சீரியல் நடிகர் விஷ்ணு சொன்னதை கேட்டு ஷாக்கான ரசிகர்கள்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

ரஜினி, கோகுலத்தில் சீதை, என்றென்றும் புன்னகை, சிப்பிக்குள் முத்து' உள்ளிட்ட  பல  சீரியல்களில் நடித்து ஹிட் கொடுத்தவர் தான்  நடிகர் விஷ்ணுகாந்த்.

இவ்வாறுஇருக்கையில் 'சிப்பிக்குள் முத்து' தொடரில் இவர் நடிக்கும் போது அந்த சீரியலில் உடன் நடித்த சம்யுக்தா மீது காதல் வயப்பட்டார்.சம்யுக்தாவுக்கும் இவர் மீது காதல் உண்டாக, விஷ்ணுவின் ஒரு பிறந்த நாளில் அந்தக் காதலை கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து இருவரும் சில மாதங்கள் காதலித்தனர். இதன் பிறகு தங்கள் காதல் குறித்து வீட்டாருக்குத் தெரியப்படுத்தி, முறைப்படி சம்மதம் வாங்கி கடந்த மார்ச் மாதம் திருமணம் செய்து கொண்டனர்.

விஷ்ணு-சம்யுக்தா திருமணத்தில் சின்னத்திரையைச் சேர்ந்த பல நட்சத்திரங்கள் நேரில் வந்து வாழ்த்திச் சென்றனர்.

இந்தப் பின்னணியில் தற்போது விஷ்ணு - சம்யுக்தா இருவரும் பிரிந்து விட்டதாக செய்திகள் வெளியாகி தீயாய் பரவி வருகின்றது.

மேலும், திருமணத்தின் போது ஜோடியாக எடுத்துப் பகிர்ந்திருந்த புகைப்படங்களையும் இருவரும் தங்களுடைய இன்ஸ்டா பக்கங்களிலிருந்து நீக்கியிருக்கிறார்கள்.


இது தொடர்பாகப் பேச சம்யுக்தாவை  தொடர்பு கொண்ட போது அவர்  பதிலளிக்கவில்லையாம்.விஷ்ணுவைத் தொடர்பு கொண்டு  பேசிய போது அவர் அதற்கு பதில் அளித்துள்ளாராம்.

அதாவது அவர் தெரிவித்ததாவது....

''இந்தச் செய்திக்கு நான் எப்படி ரியாக்ட் செய்யறதுன்னே தெரியல. எங்களுக்கிடையில் பிரச்னை இருக்கு. ஆனா கல்யாணமான புதுசுலயே அதாவது இவ்ளோ சீக்கிரத்துலயே என்னைப் பத்தி இப்படியொரு செய்தி வெளிவந்து வைரலாகும்னு நான் எதிர்பார்க்கவே இல்லை. அதேநேரம் இந்தச் செய்தி தொடர்பா 'விளக்கம் தர்றேன்'னு எதையும் பேசவும் நான் இப்ப விரும்பலை. எல்லா விஷயங்களும் வெளியில வர்றதுக்குன்னு ஒரு நாள் இருக்கும். அந்த நாளில் வந்துட்டுப் போகட்டும்' என முடித்துக் கொண்டார்.

இருவரையும் அறிந்த சிலரிடம் பேசிய போது, 'காதலிச்சாக் கூட வீட்டுப் பெரியவங்க அனுமதி இருந்தா மட்டுமே கல்யாணம் பண்ணணும்னு முடிவு செய்து அப்படியே செய்தாங்க. இப்ப என்ன பிரச்னைன்னு யாருக்குமே தெரியலை. ஒருவேளை இரண்டு பேருடைய வீட்டார் தரப்பில் யாரும் இவங்களுடைய சண்டைக்குக் காரணமா இருக்காலோன்னு ஒரு பேச்சு இங்க கேக்குது. எது நிஜம்கிறது சம்பந்தப்பட்டவங்களுக்குத்தான் தெரியும்'' என்கிறார்கள் இவர்கள்.


எனினும் முன்னதாக சம்யுக்தா விஷ்ணுவை டேக் செய்து தனது காதலை வெளிப்படுத்திய தருணத்தில், 'எல்லா குழப்பங்களுக்கும் நடுவில் நான் உங்களைக் கண்டேன். நீங்கள் உண்மையிலேயே என் புன்னகையின் அளவு. என் வாழ்வின் அனைத்து துன்பங்களையும் மகிழ்ச்சியாக மாற்றியவர். நான் உங்களுடன் இருக்கும்போது என்னை நன்றாக உணர்கிறேன். என் வாழ்க்கையில் வந்ததற்கு மிக்க நன்றி. எனினும் இந்த பிறந்த நாளில் இருந்து உங்களுடன் என் வாழ்க்கை பயணம் மிகவும் அழகாக இருக்கும்' எனக் குறிப்பிட்டு இருந்தார்.

Advertisement

Advertisement