• Sep 21 2024

பங்ஷனுக்கு வந்து வெண்பா -பாரதி கொடுக்கப்போகும் ஷாக் என்ன? மெகா சங்கமம் எபிசோட் அப்டேட்

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஹிட்டாக ஓடிக்கொண்டு இருக்கும் சீரியல்கள் தான் பாரதிகண்ணம்மா மற்றும் ராஜா ராணி-2.இந்த இரண்டு சீரியல்களும் தற்போது மகாசங்கமம் என்ற பெயரில் ஒளிபரப்பாகி வருகின்றது.

இவ்வாறுஇருக்கையில் இன்றைய எபிசோட்டில் என்ன நடக்கப்போகின்றது என்பதை பார்ப்போம்…

ஹேமா மற்றும் லட்சுமி என இருவரும் விளையாடிக்கொண்டிருக்கும் போது ஹேமா தனக்கு சித்தப்பா சித்தி தாத்தா பாட்டி என எல்லோரும் கிப்ட் கொடுத்தாங்க என சந்தோஷமாக சொல்கிறார். மேலும் டாடி 3 டிரஸ் எடுத்துக் கொடுத்தார் என சொல்கிறார். இதைக் கேட்டு லட்சுமி வருத்தப்படுகிறார்.

அதன் பின்னர் ஹேமா உனக்கு யார் யார் என்ன கிப்ட் கொடுத்தாங்க எனக்கு கேட்க எனக்கு எங்கம்மா காலையிலே கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தாங்க அதைவிட பெரிய கிப்ட் எதுவுமே இல்லை என சொல்ல இத்தனைக்கும் அம்மா இல்லாத காரணத்தினால் வருத்தப்படுகின்றார் ஹேமா.

மேலும் இந்த பக்கம் பாரதி ஹாஸ்பிடல் இருக்க அப்போது வெண்பா போன் செய்து உன் வீட்டு பங்க்ஷனுக்கு என்ன ஒரு வார்த்தை கூட கூப்பிடவில்லை என பேச அப்போது பாரதி அன்னைக்கு உன் வீட்டு பங்க்ஷன்ல உன்னை கல்யாணம் பண்ணிக்க எனக்கு விருப்பமில்லைன்னு சொன்னதுனால எந்த முகத்தை வைத்துக்கொண்டு கூப்பிடறதுனு தெரியல என பாரதி செல்கிறார்.

இதன் பிறகு சரி நீ கண்டிப்பா பங்க்ஷனுக்கு வரணும் என கூறுகிறார். ஹேமாவோட அம்மா யாருன்னு சொல்ல போறியா? யாரை சொல்ல போற கண்ணம்மாவையா என கேட்கிறார். ஆனால் பாரதி அதை ஃபங்ஷனில் நீயே பார்த்து தெரிஞ்சுக்கோ என சொல்லி போனை வைத்து விடுகிறார்.

மேலும் இந்த பக்கம் ராஜா ராணி குடும்பத்தினர் வர அவர்களை வரவேற்று அனைவரும் சந்தோஷமாக பேசிக் கொண்டிருக்கும் நேரத்தில் வெண்பா என்ட்ரி கொடுக்கிறார்.

என் வீட்டு பங்ஷன்ல வந்து என்ன எல்லாம் செய்தீங்க என எல்லோரையும் கலாய்த்து விட்டு தன்னை பாரதி தான் வர சொன்னான் ஏதோ முக்கியமான பங்கு இருக்கு என சொன்னான் என சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். இப்படியாக இன்றைய முதல் அரை மணி நேர எபிசோட் முடிவடைகிறது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement