தமிழ் திரை உலகில் நுழைந்த குறுகிய காலத்திலேயே மிகப் பிரபலமான இயக்குநர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் அட்லீ. இவர் இயக்குநர் மட்டுமல்லாமல் திரைக்கதை, எழுத்தளார் என பல முகங்களைக் கொண்டு திகழ்கிறார். இவர் ராஜா ராணி படத்தின் மூலம் தான் சினிமா உலகில் இயக்குனராக அறிமுகமாகி இருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.
இந்நிலையில் தளபதி விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் ஆகிய சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து இருந்தார். இதில் விஜய்யை வைத்து முதலாக தெறி என்ற படத்தை இயக்கி இருந்தார். ரசிகர்கள் எதிர்பார்த்த மாதிரி இந்த படம் ஆக்க்ஷன், சென்டிமென்ட் என அனைத்தும் கலந்த கலவையாக இருந்ததால் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றிருந்தது.
மேலும் இளைய தளபதியாக இருந்த விஜய் தளபதி விஜய் ஆக ஆனதே இவரின் மெர்சல் படத்திற்குப் பிறகு தான். இந்த மெர்சல் சூப்பர் ஹிட் ஆனது. இதனை தொடர்ந்து விஜயை வைத்து மூன்றாவதாக பிகில் என்ற படத்தை அட்லீ இயக்கி இருந்தார். இந்த படத்தில் விஜய் அவர்கள் ராயப்பன், மைக்கேல் என்று அப்பா – மகன் கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.
தொடர்ந்து அட்லீ அவர்கள் தற்போது பாலிவுட் சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான ஷாருக்கானை வைத்து ‘ஜவான்’ படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் ஆரம்பித்ததில் இருந்தே அட்லீ மும்பையில் தான் இருந்து வருகிறார். இருப்பினும் அடிக்கடி சென்னைக்கும் விசிட் அடித்து வருகிறார்.
அந்த வகையில் சமீபத்தில் சென்னையில் இருந்து மும்பை புறப்பட்டார். இப்படி ஒரு நிலையில் அட்லீ மும்பையில் உள்ள தனியார் விமான நிலையம் ஒன்றில் ஷாருக்கானுடன் இருந்தார். அப்போது அங்கு இருந்த வட இந்திய புகைப்பட கலைஞர்கள் சிலர் அட்லீயை "இட்லி சார்" என்று அழைத்தனர். அதிலும் ஒரு புகைப்பட கலைஞர் ‘இவ்ளோ கருப்பா இருக்கான் தெரியவே இல்ல’ என்று கேலி செய்து இருக்கும் ஆடியோவும் அந்த வீடியோவில் அப்பட்டமாக கேட்டு இருக்கிறது.
Listen News!