• Sep 21 2024

நயன்தாரா, சமந்தா இருவரும் இரட்டை அர்த்தமாக பேசும்போது நான் வீடியோவில் பேசுவது என்ன தவறு? பயில்வான் ரங்கநாதன்

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

யூடியூப்பில் சினிமாத்துறையினர் மற்றும் நடிகைகள் குறித்து அருவருத்தக்க வகையில் பேசுவதாக நடிகர் பயில்வான் ரங்கநாதன் மீது தொடர்ச்சியாக புகார்கள் எழுந்த வண்ணம் இருக்கின்றன. அண்மையில் தயாரிப்பாளர் கே.ராஜன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பயில்வான் ரங்கநாதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் ஒன்றை அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. எந்தவித ஆதாரமும் இல்லாமல், பொய் புரட்டு செய்திகளை பரப்பிக் கொண்டிருப்பதாகவும் பயில்வானை கடுமையாக சாடினார்.

இந்நிலையில், தன்னைப் பற்றி அவதூறாக பேசும் திரைப்பட தயாரிப்பாளர் கே.ராஜன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பயில்வான் ரங்கநாதன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

எனினும் அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், பத்திரிக்கை துறையில் தனக்கு 45 ஆண்டுகாலம் அனுபவம் இருப்பதாகவும், தன்னைப் பற்றி கே.ராஜன் கூறுவது முற்றிலும் பொய் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

நான் இதுவரை எந்த சினிமா நடிகர், நடிகைகளிடம் பணம் வசூலித்தலில்லை. எவரிடமும் பத்து பைசா வாங்கியது கிடையாது. அந்த ராஜன் கூறுகிறார் நான் நடிகைகளிடம் அதிக பணம் வசூலிக்கிறன் என்று நான் எவரிடமும் வாங்கவில்லை. நான் சவால் விடுகிறேன் அப்படி வாங்கியது என்றால் நான் வேலையை விட்டு போகிறேன்.அவன் நிர்வாணமா நடப்பானா என கேட்டுள்ளார்.

அத்தோடு நடிகர், நடிகைகள் மற்றும் சினிமா பிரமுகர்கள் மீது தக்க ஆதாரங்களுடன் தகவல்களையும், செய்திகளையும் சமூக வலைத்தளங்களில் பேசி வருகிறேன். எனக்கு யூடியூப் சேனல்களில் மில்லியன் கணக்கான ஃபாலோவர்ஸ் உள்ளனர். யூடியூப் சேனலில் உண்மையை மட்டுமே பேசி வருகிறேன். தவறான தகவல்களை யூடியூப் மற்றும் சமூக வலைத்தளங்களில் தெரிவிப்பதில்லை.

என் மீது புகார் கொடுத்துள்ள ராஜன் எதற்காக குடும்பத்தை விட்டுவிட்டு தனியார் ஓட்டலில் தங்கி இருக்கிறார்?. அவர் பல விழாக்களிலும், சேனல்களிலும் தொடர்ந்து அருவருப்பாகவும், தரக்குறைவாகவும் பேசியும் என்னை மிரட்டியும் வருகிறார். நான் யூடியூப் சேனல்களில் அப்போதைய நடிகர் ஜெய்சங்கர் முதல் லட்சுமிகாந்தன் கொலை வழக்கு வரை பேசி இருக்கிறேன். என்னுடைய வாழ்க்கையின் அனுபவத்தை வைத்து மட்டுமே யூட்யூபில் மற்றவர்களைப் பற்றிப் பேசிகிறேன் என தெரிவித்துள்ளார்.

மேலும் பத்திரிக்கையாளர்கள் கேட்ட பல கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் கோபப்பட்டர் பயில்வான். நடிகர், நடிகைகளை ஜாதி ரீதியாக அவதூறாக பேசுவது சரியா என கேட்கப்பட்டதிற்கு பதிலளிக்க முடியாமல் திணறினார். அத்தோடு 'காத்துவாக்குல 2 காதல் என்ற படத்தில் நடிகைகள் இருவர் இரட்டை அர்த்தமாக பேசும்போது, நான் வீடியோவில் பேசுவது என்ன தவறு? என கூறியுள்ளார் பயில்வான் ரங்கநாதன்.

Advertisement

Advertisement