• Sep 20 2024

புருஷனுக்காக மகா செய்த காரியம்; கடுப்பில் திட்டியனுப்பிய சூர்யா! ஆஹா கல்யாணம் இன்றைய எபிசோடு

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் சீரியல் தான் ஆஹா கல்யாணம். ஏனைய சீரியல்களை போலவே இந்த சீரியலும் துன்ப துயரங்கள் என அனைத்து விதமான உணர்ச்சிகளையும் எடுத்துக்காட்டுகின்றது. இந்நிலையில், இன்றைய நாளுக்கான எபிசோடில் என்ன நடக்கின்றது என பார்க்கலாம்.

அதன்படி, பிரபாவை தேடிக் கொண்டு கோடீஸ்வரியின் வீட்டிற்கு பொலிஸ் வருகிறது. பொலிசை பார்த்து கோடீஸ்வரியும், தசாதரணும் திணறிப் போய் என்னவென்று கேட்க 'உங்க சின்ன பொண்ணு பிரபா ஒரு பையனை ஸ்டிக்கால அடிச்சிருக்காரு. அதனால அவங்க கேஸ் கொடுத்து இருக்காங்க' என்று சொல்லி பிரபாவை பொலிஸ் அரெஸ்ட் பண்ணிட்டு போகின்றனர். பின்னாடியே அவங்க அப்பா, அம்மாவும் சொல்கின்றனர். 

இதையடுத்து, ஆபீஸில் சூர்யா பவித்ராவிடம் 'டிசைன் எடுத்துட்டு உள்ள வாங்க' என்று கூப்பிட பவித்ரா காண்பித்த டிசைனை பார்த்துவிட்டு, 'இது எதுவுமே சரியில்லை ஆன்டிக் கலெக்ஷன் வேண்டும் வேற போய் கொண்டு வாங்க' என்று சூர்யா சொல்கிறார்.


அதன்பின் பவித்ரா அப்செட் ஆகி மகாவிடம், 'சார் எந்த டிசைன் காமிச்சாலும் புடிக்கலைன்னு சொல்றாரு என்னதான் மேடம் பண்றது' என்று கேட்க, மகா சில டிசைன்ஸ் ரெடி பண்ணி பவித்ராவிடம் கொடுத்து சூர்யா கிட்ட போய் காமிக்க சொல்கிறார்.

இதையடுத்து, பவித்ரா தானே செஞ்சதாக அந்த டிசைன் எல்லாம் எடுத்துட்டு போய் சூர்யா கிட்ட காண்பிக்க 'இது ஓகே' என சொல்லிவிட்டார். அதன்பிறகு மீட்டிங் ஆரம்பமாகிறது. அப்பொழுது 'இந்த டிசைன் எல்லாம் நீங்க தான் பண்ணிங்களா நல்லா இருக்கு' என பாராட்டுகின்றனர்.

அதேவேளை, பிரபாவை ஸ்டேஷனில் வைத்திருப்பதால் கோடீஸ்வரி யோட அக்கா பாக்கியா அங்கு வந்து 'நான் கமிஷனர் கிட்ட பேசுறேன்' என்று சொல்லி பேசிக் கொண்டிருக்கிறார் இதோட இன்றைய எபிசோடு முடிந்துள்ளது.

Advertisement

Advertisement