• Sep 21 2024

ராதிகாவுக்கு தெரியாமல் மயூ செய்த காரியம்- நெகிழ்ந்து போன பாக்கியா-செழியனுக்கு அட்வைஸ்ட் பண்ணிய ஜெனி

stella / 1 year ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று  பார்ப்போம்.

அதாவது  ஈஸ்வரி திட்டிய கோபத்தில் ராதிகா பாக்கியாவிடம் வந்து சண்டை போடுகின்றார். இதனால் கடுப்பான பாக்கியா ராதிவிடம் இன்றைக்கு காலையில இருந்து நடக்கிறத யோசிச்சுப் பாருங்க யார் பிரச்சினை பண்ணுறாங்க என்று தெரியும் எனப் பதிலடி கொடுக்கின்றார்.


பின்னர் விடிந்ததும் பாக்கியா இங்கிலீஸ் கிளாசில் இருக்கும் போது பழனி தான் சுட்ட தேன் முறுக்கு என கொடுத்து சாப்பிடச் சொல்கின்றார்.பாக்கியா அதனை சாப்பிட்டு நல்லா இருக்கு என்று பாராட்ட பக்கத்தில் இருப்பவர் தேன் மறுக்கு வாங்கிய கடைபில்லை வாங்கி இது என்ன என்று கேட்க பழனி தேன் மறுக்கு சுட்டுப் பார்த்தேன் அது சரியா வரல என்று சமாளிக்கின்றார்.

இதனால் பாக்கியா நான் சொல்லித் தாரேன் கவலைப்படாதீங்க என்று சொல்கின்றார். தொடர்ந்து செழியனும் ஜெனியும் பேசிட்டு இருக்கும் போது செழியன் ஆபீஸில் வேலை செய்யும் மாலினி தன்னுடன் எல்லை மீறி பேசுவதாக சொல்ல ஜெனி செழியனை ஆறுதல்ப்படுத்துகின்றார்.

பின்னர் பாக்கியா பழனி வீட்டிற்குச் சென்று பேசிக் கொண்டிருக்கும் போது அவருடைய அம்மா சாப்பாடு சரியில்லை உப்பு சுவை இல்லாத சாப்பாடு சாப்பிட சொல்லுறியா அந்த சாப்பாடு எல்லாம் என்னால சாப்பிட முடியாது என்று அடம் பிடிக்க பாக்கியா சென்று சாப்பாடு செய்து கொடுக்கின்றார்.


இதனை பழனியின் அம்மா ருசித்து சாப்பிடுகின்றார். பின்னர் வீட்டிற்கு வந்ததும் கிச்சனில் ஜெனியும் அமிர்தாவும் நின்று கொண்டு வேலை செய்து கொண்டிருக்கின்றனர். அந்த நேரம் வந்து மயூ தண்ணீர் கேட்க தண்ணீரைக் கொடுத்து விட்டு மயூவுக்கு சாப்பாடு கொடுக்கின்றார். பாக்கியாவின் பாசத்தை பார்த்த மயூ நீங்க நல்ல ஆன்ட்ரி என்று சொல்கின்றார். இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.

Advertisement

Advertisement