தஞ்சைக்கு வருகிறேன். எட்டு திக்கும் புலிக்கொடி நாட்டும் திரைப்பயணம் தொடங்கும் முன் பெருவுடையாரின் ஆசி வேண்டுமல்லவா? என்று புதிய பதிவு உன்றினைப் போட்ட நடிகர் விக்ரம்.
பிரமாண்ட இயக்குநர் மணிரத்னத்தின் இயக்கத்தில் கல்கியின் புகழ் பெற்ற நாவலை அடிப்படையாகக் கொண்ட உருவாகியுள்ள திரைப்படம் தான் பொன்னியின் செல்வன். இப்படமானது இரண்டு பாகங்களாக உருவாகவுள்ளதோடு முதல் பாகம் செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
ஜெயம்ரவி, விக்ரம், கார்த்தி, சரத்குமார், பார்த்திபன், ஜெயராமன், ஜஸ்வர்யா ராய், த்ரிஷா உள்பட முன்னணி திரைப்பிரபலங்கள் நடித்துள்ள இப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.
இப்படத்தில் நடித்த நடிகர்கள் கார்த்தி, த்ரிஷா உள்ளிட்டோர் படத்தின் கதாபாத்திரங்களை குறிப்பிட்டு அவ்வப்போது ஜாலியாக கலாய்த்து தங்களது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில், இப்படத்தில் ஆதித்ய கரிகாலனாக நடித்துள்ள விக்ரம் தற்போது தனது இணைய பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார்.
பொன்னியின் செல்வன் அதில், "சரி. தஞ்சைக்கு வருகிறேன். எட்டு திக்கும் புலிக்கொடி நாட்டும் திரைப்பயணம் தொடங்கும் முன் பெருவுடையாரின் ஆசி வேண்டுமல்லவா? குந்தவை, உடன் வருகிறாயா? வந்தியத்தேவன் வருவான். என்ன நண்பா,வருவாய் தானே? அப்படியே அந்த அருண்மொழியையும் இழுத்து வா" என குறிப்பிட்டுள்ளார். இவரின் இந்த பதிவு வைரலாகி வருவதைக் காணலாம்.
சரி. தஞ்சைக்கு வருகிறேன். எட்டு திக்கும் புலிக்கொடி நாட்டும் திரைப்பயணம் தொடங்கும் முன் பெருவுடையாரின் ஆசி வேண்டுமல்லவா?குந்தவை, உடன் வருகிறாயா? வந்தியத்தேவன் வருவான்.என்ன நண்பா,வருவாய் தானே?அப்படியே அந்த அருண்மொழியையும் இழுத்து வா! @Karthi_Offl @actor_jayamravi @trishtrashers pic.twitter.com/6JW2s8cfK8
Listen News!