• Sep 20 2024

முதன்முறையாக வீட்டுக்கு வந்த விக்னேஷ் சிவன் முன்னாடி நயன்தாரா செய்த காரியம்- உண்மையை உடைத்த பிரபலம்

stella / 10 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 20 ஆண்டுகளுக்கு மேலாக முன்னணி நடிகையாக விளங்குபவர் தான் நடிகை நயன்தாரா. இவர் இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அத்தோடு அண்மையில் வாடகைத் தாய் முறை மூலம் இரண்டு குழந்தைகளையும் பெற்று எடுத்துக் கொண்டார்.

திருமணத்திற்கு முதல் லிவ்விங் டூ கெதரில் வாழ்ந்து வந்த இவர்கள் பிறந்தநாளை கொண்டாடுவது, புது வருடத்தை வெளிநாட்டில் கொண்டாடுவது, அடிக்கடி வெளிநாட்டுக்கு போய் ஜாலியாக ஊர் சுற்றுவது என டேட்டிங் செய்து வந்தனர். பின்னர் பிரமாண்டமாக திருமண பந்தத்தில் இணைந்து கொண்டனர். திருமணத்திற்குப் பின்னரும் இருவரும் பிஸியாக கெரியரில் கவனம் செலுத்தி வருகின்றனர்.


இந்நிலையில், அண்மையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய விக்னேஷ் சிவன், நானும் ரவுடிதான் படம் உருவானபோது நயனை சந்தித்து பேசியது உள்ளிட்ட பல அனுபவங்களை பகிர்ந்துகொண்டார். தனுஷ் சார்தான் இப்படத்தின் தயாரிப்பாளர். அவர்தான் நயன்தாராவை சந்தித்து கதை சொல்ல சொன்னார்.

எப்படியும் அவர் சம்மதிக்க மாட்டர் என நினைத்தே அவருக்கு கதை சொல்லப்போனேன். அவரின் வீட்டிற்கு போனதும் என்னை உட்காரவைத்துவிட்டு முதலில் அவரின் செல்போனை ஆப் செய்தார். அதுவே எனக்கு பெரிய நம்பிக்கையை கொடுத்தது. ஏனெனில், பெரும்பாலானோர் அதை செய்ய மாட்டார்கள். முதல் சந்திப்பிலேயே அவரை எனக்கு பிடித்துப்போனது.


நானும் ரவுடிதான் படம் உருவானபோது எனக்கும் ,அவருக்கும் சின்ன சின்ன சண்டைகளும் வரும். ஆனால், இருவருக்கும் நல்ல புரிதல் இருந்தது. அதுவே காதலாகவும் மாறியது’ என விக்னேஷ் சிவன் பேசியுள்ளார்.

Advertisement

Advertisement