விஜய் டிவியில் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் ஈரமான ரோஜாவே சீசன் 2. இந்த சீரியலில் ஜீவா மற்றும் காவியா காதலித்த விடயம் எல்லோருக்கும் தெரிந்து விட்டது. இதனால் ப்ரியா ஜீவாவை விட்டுப் பிரிந்து தன்னுடைய வீட்டில் இருக்கின்றார்.
அதே போல பார்த்திபனும் காவியாவும் மற்றவர்கள் முன்னாடி சந்தோஷமாக இருப்பது போல காட்டிக் கொள்கின்றனரே தவிர இருவரும் பிரிந்து தான் வாழ்கின்றனர். இப்படியான நிலையில் ஓர் ப்ரோமோ வெளியாகியுள்ளது.
அதாவது பார்த்திபனின் அம்மா பார்த்திபனைத் தேடி ரூமுக்குள் வருகின்றார். அவர் வருவதை அறிந்த பார்த்திபன் அறங்கி காவியாவின் அருகில் படுத்துக் கொள்கின்றார். பார்த்திபன் பக்கத்தில் படுத்ததால் காவியா அதிர்ச்சியடைந்து எழும்புகின்றார். இது குறித்த ப்ரோமோ வெளியாகியுள்ளதைக் காணலாம்.
Listen News!