• Sep 20 2024

தமிழை வீட்டிற்கு வரவிடாமல் தடுக்க ராகினி செய்த காரியம்- செம சந்தோஷத்தில் இருக்கும் சரஸ்வதி- கடும் அதிர்ச்சியில் நடேசன்

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்ருக்கும் சீரியல் தான் தமிழும் சரஸ்வதியும். அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடைபெறவுள்ளது என்று பார்ப்போம்.

தமிழும் சரஸ்வதியும் டெஸ்ட் ரிசல்ட் வாங்குவதற்காக ஹாஸ்பிட்டலில் இருக்கின்றனர். அங்கே ரிசல்ட் வந்ததும் பார்த்தால் இருவருக்கம் ஒரு பிரச்சினையும் இல்லை சீக்கிரமாவே உங்களுக்கு குழந்தை பிறந்திடும் கொஞ்ச நாளாக நீங்க ரெண்டு பேரும் ரொம்ப ஸ்ரெட்ஸ்ல இருந்திருக்கிறீங்க என்று சொல்ல சரஸ்வதியும் ஆமாம் டாக்டர் குடும்பத்தில சின்ன பிரச்சினை அதனால இவங்க வீட்டில இருந்து இப்போ வெளியே தனியாகத் தான் இருக்கின்றோம் என்று கூறுகின்றார்.


அப்போது டாக்டர் இனிமேல் எதையும் யோசிக்காமல் ப்ரீயாக இருங்க என்று சொல்கின்றார்.தொர்ந்து தமிழ் வீட்டுக்கு வரும் நடேசன் நமச்சியுடன் இருந்து பேசிக் கொண்டிருக்கும் போது தமிழும் சரஸ்வதியும் வருகின்றனர். அப்போது நமச்சி ஹாஸ்பிட்டலில் என்ன நடந்தது என்று கேட்க எல்லாம் நல்ல விஷயம் தான் சொல்லியிருக்கிறாங்க எங்களுக்கு குழந்தை பிறக்கும் என்று சொன்னாங்க என்று சொல்ல நடேசனும் நமச்சியும் சந்தோஷப்படுகின்றனர்.

தொடர்ந்து நடேசன் தங்களுக்கு 60வது கல்யாணம் நடக்கப் போகின்ற விஷயத்தைச் சொல்ல தமிழும் சரஸ்வதியும் சந்தோசப்படுகின்றனர். அத்தோடு நீங்க இருவரும் கண்டிப்பாக வரணும் என்று சொல்ல தமிழும் சரஸ்வதியும் யோசிக்கின்றனர். இருந்தாலும் சரஸ்வதி குடும்பம் மீண்டும் இணைவதால் சந்தோஷப்படுகின்றார்.

மேலும் நடேசன் வீட்டுக்குச் சென்று கோதையிடம் பேசிட்டு இருக்கிறார். அப்போது இந்த நிகழ்ச்சிக்கு தமிழையும் சரஸ்வதியையும் கட்டாயம் கூப்பிடோனும். அது தான் என்னோட ஆசை, என்னுடைய தலைல அவங்களும் தண்ணீர் ஊற்றனும் என்று சொல்ல கோதை சரி உங்க இஷ்டம் என்று சொல்லி கீழே எல்லோரையும் அழைத்து விஷயத்தைச் சொல்கின்றார்.


இதைக் கேட்ட ராகினி அந்த கொலைகாரனை இங்க கூப்பிட வேணாம். என் புருஷனை கொல்லப் பார்த்தவனை இங்க கூப்பிடனுமா என்று கேட்க கோதையும் வசுவும் மாறி மாறி ராகினியை சம்மதிக்க வைக்க முயற்சிக்கின்றனர். ஆனால் ராகினி அவன் இந்த வீட்டுக்கு வந்தால் நான் இந்த வீட்டை விட்டுப் போகப் போறேன் என்று சொல்லி அடம்பிடித்து மயங்கி கீழே விழுகின்றார்.

ராகினி மயங்கி விழுவதைத் பார்த்த கோதை ராகினி இப்படி எல்லாம் பண்ணிட்டு இருக்கிறா,வேணாம் அவங்களை இங்க கூப்பிட வேணாம் என்று சொல்ல நடேசன் என்ன செய்வது என்று தெரியாமல் யோசிக்கின்றார். இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைவதைக் காணலாம்.


Advertisement

Advertisement