தென்மேற்கு பருவக்காற்று திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகியவர் தான் விஜய் சேதுபதி. இதனைத் தொடர்ந்து இவர் நடித்த நடுவுல கொஞ்சம் பக்கத்த காணும், பீட்சா, சூதுகவ்வும் படங்கள் வரிசையாக ஹிட்டடித்தன. ஒவ்வொரு படமும் ஒவ்வொரு ஜானரில் வெளியாகி,இவருடைய படம் ரசிகர்களின் பாராட்டைப் பெற்றது.
நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்றில்லாமல் வில்லன் கதாபாத்திரத்திலும் கலக்க ஆரம்பித்தார்.அந்தவகையில் அவர் பேட்ட, மாஸ்டர், விக்ரம் படங்களில் ஏற்றிருந்த நெகட்டிவ் கதாபாத்திரம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. தற்பொழுது அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் ஜவான் படத்தில் வில்லனாக நடித்துவருகிறார். அதுமட்டுமின்றி கத்ரீனா கைஃபுடன் மெர்ரி கிறிஸ்துமஸ் படத்திலும் நடித்திருக்கிறார்.
அவர் தற்போது தமிழில் ஆறுமுக குமார் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்துவருகிறார். படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. படத்தின் பூஜையும் அங்குதான் போடப்பட்டது. முதல் ஷெட்யூலை முடித்து இரண்டாவது ஷெட்யூலில் இருக்கிறது படக்குழு. அவர் படப்பிடிப்பில் மலேசியாவில் இருந்தபோது அவரை காண்பதற்கு ரசிகர்களும், ரசிகைகளும் ஷூட்டிங் ஸ்பாட்டில் குவிந்தனர்.
இந்நிலையில் தன்னை பார்க்க வந்த ரசிகை ஒருவருக்கு விஜய் சேதுபதி செய்திருக்கும் உதவி பெரும் பாராட்டை பெற்றுள்ளது. அதாவது மலேசியாவில் வீட்டு வேலை செய்யும் பெண் என்று சொல்லி ஒரு பெண் அழைத்து செல்லப்பட்டிருக்கிறார். ஆனால் அந்தப் பெண்ணுக்கு அங்கு சரியான வேலை இல்லை எனவும், சில கொடுமைகளை அனுபவித்ததாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி விசா காலமும் முடிந்துவிட்டதால் மீண்டும் செல்ல முடியாமல் தவித்திருக்கிறார்.
அந்தப் பெண் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்து நடந்தவற்றை விஜய் சேதுபதியிடம் கூற, அவர் உடனே எதையுமே யோசிக்காமல் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி தேவையான பணத்தை கட்டி அந்தப் பெண்ணை பத்திரமாக தமிழ்நாட்டுக்கு அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது. இப்படிப்பட்ட தகவல் வெளியானதை அடுத்து விஜய் சேதுபதிக்கு பலரும் தங்களது பாராட்டை தெரிவித்துவருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!