• Sep 20 2024

கயல், ஆனந்தியைக் கைது செய்த போலீஸ்... சிக்கிய முக்கிய ஆதாரம்... கதறி அழும் குடும்பம்... இனி நிகழப்போவது என்ன..? Kayal - Promo..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான ஹிட் சீரியல்களில் ஒன்று கயல். இந்த சீரியலானது தன் குடும்பத்திற்காக போராடும் ஒரு பெண்ணின் கதையை மையமாக கொண்டு அமைந்துள்ளது, அதாவது கடின உழைப்பாளியான கயல் தன்னுடைய மொத்த குடும்பத்தையும் எவ்வாறு சிக்கலில் இருந்து காப்பாற்றி வருகிறார்.


இந்த சீரியலினுடைய கதையின் பிரகாரம் கயலின் தங்கை ஆனந்தியால் பிரபு உயிரிழந்து விட்டார். இதனையடுத்து கயல் தங்கையை காப்பாற்றுவதற்காக பிரபு சடலத்தை மூட்டை கட்டி புதைத்து விட்டார்கள். அத்தோடு புதைத்த இடத்தில் ஆனந்தியின் செயின் ஒன்றையும் தவற விட்டு விட்டார்கள்.


இந்நிலையில் தற்போது ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றது. அதில் ஆனந்தியின் செயினைப் போலீசார் கண்டு பிடித்து விட்டனர். வீட்டுக்கு வந்த போலீஸ் "அவனைப் புதைத்த இடத்தில தான் இந்த செயினையே நான் எடுத்தேன்" என்கிறார். இதனைக் கேட்டதும்ஆனந்தி பயத்தில் அழுகின்றார்.


மறுபுறம் கயல் "நீங்க லேடீஸ் என்று கூடப் பார்க்காமல் அத்து மீறுறீங்க" என்கிறார். பதிலுக்கு போலீஸ் சட்டப்படி உன்னையும் தான் அரெஸ்ட் பண்ணி வைக்கணும்" என்கின்றார். பின்னர் கயல் ஆனந்தி இருவரையும் போலீஸ் கைது செய்து கொண்டு செல்கின்றனர்.

Advertisement

Advertisement