பகாசுரன் திரைப்படத்தின் நிகழ்வு ஒன்றில் குட்டி கோபி அவர்கள் பேட்டியின் போது மோகன் சாருக்கு நன்றி என்று கூறி அதே சமயம் அவர் மேல கோவமும் இருக்கு எனக்கு புடிச்ச இயக்குநர் செல்வராகவன் சார் ஆனால் அவர் கூட ஒரு சீன் போடல எனக்கு என்று கூறினார்.
ஆனாலும் ரெட்டி சார் கூட ஜாலியா போச்சு அவர் ரொம்ப பிரெண்ட்லி டைப். சினிமா ஸ்பாட்லயும் சரி படத்திலயும் சரி ஒண்ணா தான் உட்கார்ந்து இருப்போம். இந்த படத்தின் குழுவே நல்ல மாதிரி. என்னோட ஆக்டர் போல பாக்காம பிரெண்டா பாத்தாங்க.
மேலும் அவர் கூறுகையில் ஒரு நாள் லேட்டா போய்ட்டேன் அதால திட்டி சீன்கு போ என்று சொன்னார். பிறகு லஞ்ச் டைம் வந்து அவன் என் தம்பிடா என்று சொல்லக்கூடிய இயக்குநர். இவரோட சேர்ந்து இன்னும் படம் பண்ணியிருக்கலாம் என்று ஜோசிச்சேன்.
இந்த படம் இந்த காலத்திற்கு ரொம்ப தேவையான ஒரு படம். எல்லாருமே நல்லா நடிச்சிருந்தாங்க. இந்த படம் எப்ப வரும்னு இருந்திச்சு. என்னோட சீன் ரொம்ப நல்லா இருந்திச்சு. எனக்கு ஒரு டேர்ன் பாயிண்ட்டா இருக்கும். கூல் சுரேஷ் அண்ணா எப்பவுமே வெந்து தணிந்தது காடு ஒரு வணக்கத்தை போடு என்று சொல்லி கொண்டே இருப்பார். என்று பலரையும் பாராட்டி கூறியிருந்தார்.
Listen News!