• Sep 20 2024

முல்லைக்கு என்ன நடந்தாலும் நான் உயிருடன் இருக்க மாட்டேன்- கதிர் எடுத்த முடிவு- டாக்டர் சொன்ன செய்தி- பரபரப்பான ப்ரோமோ

stella / 1 year ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் டி.ஆர்.பியிலும் முன்னணியில் நிற்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியல் தற்பொழுது விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கின்றது.

கண்ணன் வாங்கிய கடனால் கதிர் ஜெயிலுக்கு போன கதிரை ஒரு வழியாக மூர்த்தி வெளியில் எடுத்து விட்டார். இதனை அடுத்து கதிர் கண்ணனையும் ஐஸ்வர்யாவையும் மீண்டும் தங்களுடைய வீட்டுக்க கூட்டிட்டு வந்து விட்டார். கண்ணனைப் பார்த்ததும் முதலில் கோபப்பட்ட மூர்த்தி பின்னர் தன்னுடைய வீட்டில் சேர்த்துக் கொண்டார்.

தொடர்ந்து கதிர் மற்றும் முல்லை இருவரும் நடந்து செல்லும்போது ஒரு பைக் முல்லை மேல் மோதுகின்றது. அந்த பைக்கில் அடிபட்டு கர்ப்பமாக இருக்கும் முல்லை கீழே கதறியவாறு வயிறு அடிபடும் வகையில் விழுகின்றார்.

அதன் பின்னர் கதிர் அவசர அவசரமாக முல்லையை ஹாஸ்ப்பிட்டலுக்கு கொண்டு செல்கின்றார்.முல்லைக்கு இரத்தம் வேண்டும் என்பதற்காக கதிர்,ஜீவா, கண்ணன் மூவரும் இரத்தம் கொடுக்கின்றனர்.

அதனைத் தொடர்ந்து தற்பொழுது ஒரு ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் டாக்டர் வந்து முல்லைக்கு குழந்தை பிறந்து விட்டதாகவும் முல்லை ஆரோக்கியமாக இருப்பதாகவும் கூற பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் சந்தோஷமடைகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement