• Sep 20 2024

வெற்றியைப் பின்தொடரும் அபி... சுடரை ஆயுதமாகப் பயன்படுத்தும் கண்மணி... இறுதியில் நடக்கப் போவது என்ன..?

Prema / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஹிட்டாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சீரியல் தான் 'தென்றல் வந்து என்னைத் தொடும்'. மற்ற சீரியல்களை போலவே இந்த சீரியலும் அதிரடித் திருப்பங்களோடு அட்டகாசமாக சென்று கொண்டிருக்கின்றது. 

அபியை பெரிய ஆபத்திலிருந்து காப்பாற்றிய வெற்றி தற்பொழுது சுடர் தன்னுடைய பிள்ளையா அல்லது அபி எடுத்து வளர்க்கும் பிள்ளையா என்பதை அறிய முயற்சி செய்து வருகின்றார். அந்தவகையில் முதற்கட்ட முயற்சியாக ராஜஸ்தான் சென்றுள்ளார்.


இந்நிலையில் இன்றைய நாளுக்கான ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றது. அதில் சுடர் குறித்த தகவல்களைத் திரட்டுவதற்காக வெற்றி அங்கும் இங்குமாக அலைந்து திரிகின்றார். அந்தவகையில் பிரசவம் பார்த்த டாக்டரின் வீடு தேடி செல்கின்றார்.

மறுபுறம் கண்மணி தான் நினைப்பதை சாதிக்கும் வகையில் வெற்றிக்கு உண்மை தெரியக்கூடாது என்பதற்காகவும், வெற்றியைத் தடுத்து நிறுத்தும் நோக்கிலும் சுடரை ஆயுதமாகப் பயன்படுத்தி வெற்றி எங்குள்ளார்? என்ன செய்கிறார்? என்பது குறித்த தகவல்களை அபிக்கு தெரியப்படுத்திய வண்ணம் உள்ளார். 


இதனையடுத்து அபியும் வெற்றியைப் பின்தொடர்கின்றார். இவ்வாறாக இன்றைய ப்ரோமோ வீடியோ வெளிவந்துள்ளது. இதனையடுத்து இறுதியில் என்ன நடக்கப்போகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.


Advertisement

Advertisement