• Sep 20 2024

கதிரை கைது செய்த போலீஸ்... கதறி அழும் முல்லை... 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' இனி நடக்கப் போவது என்ன... ப்ரோமோ வீடியோ..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஹிட்டாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலானது விறுவிறுப்பிற்கு பஞ்சமில்லாமல் நகர்ந்து கொண்டிருக்கின்றது. அடுத்து என்ன நடக்கப் போகிறது என்ற ஆர்வம் நாளுக்கு நாள் ரசிகர்களிடம் அதிகரித்த வண்ணம் இருக்கின்றது.


இந்நிலையில் தற்போது ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகி இருக்கின்றது. அதில் கண்ணன் வீட்டிற்கு பேங்க் ஆஃபீஸர்ஸ் மீண்டும் வருகின்றனர். அவர்கள் "நாங்கள் உங்களுக்கு தந்த டைம் முடிந்து விட்டது. இனி என்ன பண்ணலாம்? உன் பொண்டாட்டிய தூக்கலாம்" என்று கூறி ஐஸ்வர்யாவை தொட போக கண்ணன் தடுக்க கண்ணனை போட்டு வீட்டிற்குள்ளே அடிக்கின்றனர். 


இதனையடுத்து ஐஸ்வர்யா தடுக்க போக ஐஸ்வர்யாவின் சித்தி அவரைப் பிடித்துக் கொள்கிறார். அந்த நேரம் அங்கு வந்த கதிர் "இங்க வந்து பொம்பிளைகளையா தப்பாக பேசுறீங்க, இன்னொரு வாட்டி உங்களை என் தம்பி வீட்டில் பார்த்தால் தொலைச்சிடுவேன்" எனக் கூறி அவர்களை போட்டு அடிக்கின்றார்.

இதனை தொடர்ந்து அங்கு வந்த போலீஸ் பாங்க் ஆளுகளை அடித்ததற்காக உன்னை அரெஸ்ட் பண்ணுறோம் எனக் கூறி கதிரை அழைத்துச் செல்கின்றனர். அதனைப் பார்த்த முல்லை "அவங்களுக்கு எதுவும் தெரியாது விட்டிடுங்க சார்" எனக் கூறி கதறி அழுகின்றார். 

ஆனால் போலீசாரோ கதிரை வாகனத்தில் ஏற்றி செல்கின்றனர். இவ்வாறாக இந்தப் ப்ரோமோ வீடியோ வெளிவந்திருக்கின்றது.


Advertisement

Advertisement