• Sep 21 2024

சூர்யாவிற்கு நடந்த அசம்பாவிதம்... பதறி அடித்து ஓடிய வெண்ணிலா... 'காற்றுக்கென்ன வேலி' இனி நடக்கப்போவது என்ன..?

Prema / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகின்ற ஒரு தொடர் தான் 'காற்றுக்கென்ன வேலி'. இந்த சீரியல் முழுக்க முழுக்க கல்லூரியை மையப்படுத்தி உருவாக்கப்பட்டு வருகிறது. அத்தோடு இந்த சீரியலில் அடிக்கடி பரபரப்பு திருப்பங்களும் நடைபெற்ற வண்ணம் இருக்கின்றது.


இந்நிலையில் இன்றைய நாளுக்கான ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றது. அதில் சூர்யா வெண்ணிலாவிடம் "அப்போ நீ நிஜமாவே தாலி மாற்றலயா..? எனக்கு ஏதாவதொன்னு ஆச்சு என்றால் நீ தான் பொறுப்பு" எனக் கூறுகின்றார். பதிலுக்கு வெண்ணிலா "உங்களுக்கு என்ன ஆனால் எனக்கென்ன, கிளாசுக்கு டைம் ஆச்சு நான் வாறன்" எனக் கூறிவிட்டு செல்கின்றார்.


மறுபுறம் வெண்ணிலாவிடம் ஓடி வந்த ஒருவர் சூர்யாவிற்கு ஆக்சிடண்ற் ஆகிவிட்டதாகவும், அவருக்கு நல்ல அடி எனவும் கூறுகின்றார். இதனைக் கேட்டதும் வெண்ணிலா பதற்றத்தில் அங்கிருந்து ஓடிச் செல்கின்றார்.


இவ்வாறாக இந்தப் ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றது.  


Advertisement

Advertisement