• Sep 21 2024

அபிக்குத் தெரியாமல் விஜி செய்த தில்லாலங்கடி வேலை... போட்டுக் கொடுக்க ஆதாரத்தை ரெடி பண்ணிய கண்மணி... இனி நடக்கப்போவது என்ன..?

Prema / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் தென்றல் வந்து என்னைத் தொடும். அதிரடித் திருப்பங்களுடன் நகர்ந்து கொண்டிருக்கும் இந்த சீரியலில் அடுத்து என்ன நடக்கவுள்ளது என்பது குறித்த ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகி இருக்கின்றது.


அதில் அபி சுடரை விஜி அம்மாவுடன் டூருக்கு அனுப்பி வைக்கின்றார். அப்போது சுடரிடம் "டெய்லி எனக்கு கால் பண்ணி பேசணும், நான் இல்லேன்னாலும் டைம் க்கு தூங்காமல் அடம்பிடிக்கக் கூடாது, நைட்டில் போன் எடுக்கக் கூடாது, கரெக்டா ஒன் டைம்க்கு தூங்கமும், ஒன் டைம்க்கு எழும்பணும்" என அட்வைஸ் பண்ணுகின்றார். அதற்கு அபியும் ஓகேன்னு சொல்கிறார்.


பின்னர் விஜியிடம் "இவள் ஏதாவது சேட்டை பண்ணினாலோ, பிடிவாதம் பிடித்தாலோ உடனே எனக்கு கால் பண்ணுங்க" என்கிறார். பதிலுக்கு சுடர் நான் சேட்டை எல்லாம் பண்ண மாட்டேன் எனக்கூறி செல்கின்றார். 


ஆனால் விஜியும், சுடரும் அபி அனுப்பிய காரில் செல்லாமல் அபிக்குத் தெரியாமல் வெற்றியின் காரில் ஏறிச் செல்கின்றனர். இதனை அவதானித்த வீட்டுப் பணிப்பெண் கண்மணிக்கு போட்டுக் கொடுக்கின்றார். கண்மணியும் சுடரும், விஜயும் வெற்றி காரில் செல்வதை வீடியோ எடுக்கின்றார். இந்த ஆதாரத்தை வைத்தே உனக்கும் அபிக்குமான தொடர்பை முறிக்கிறேன் என விஜி பற்றி சவால் விடுகின்றார். இவ்வாறாக இந்தப் ப்ரோமோ வெளிவந்துள்ளது.   


Advertisement

Advertisement