• Sep 21 2024

கர்ப்பம் கலைந்ததை கணவனிடம் மறைக்கும் காவியா... சந்தோஷத்தில் இருக்கும் பார்த்தி... இனி நடக்கப் போவது என்ன..? ப்ரோமோ வீடியோ..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் ஈரமான் ரோஜாவே சீசன் 2.முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இந்த தொடரின் இரண்டாவது பாகம் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலானது அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பை நாளுக்கு நாள் தூண்டிய வண்ணம் தான் இருக்கின்றது.


இந்நிலையில் தற்போது ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகி இருக்கின்றது. அதில் பார்த்தி காவியாவிடம் "நான் தெரிந்தோ தெரியாமலோ நான் உன் மனசைக் கஷ்டப்படுத்திற மாதிரி நடந்திருக்கேன், என்னை மன்னிச்சிடு, இனிமேல் நம்ம வாழ்க்கையை அர்ப்பணித்து இந்த குழந்தைகள் இரண்டு பேருக்காகவும் நம்ம வாழ்க்கையை வாழ்வோம்" எனக் கூறுகின்றார். 


மறுபுறம் காவியாவும் பார்த்தியும் சீமந்தம் ஒன்றுக்கு செல்கின்றனர். அங்கு பார்தி காவியாவிடம் "இன்னும் கொஞ்ச நாளில் உனக்கும் இந்த மாதிரி சீமந்தம் நடக்கும், அதை நான் எவ்வளவு பிரமாண்டமாக செய்கிறேன் பாரு" எனக் கூறி சந்தோசப்படுகின்றார்.

அதுமட்டுமல்லாது பின்னர் கோவிலில் அங்கபிரதட்ஷனை எடுத்து தனது நேர்த்திக் கடனையும் நிறைவேற்றுகின்றார் பார்த்தி. இதனைப் பார்த்த காவியா "எனக்காகவும் நம்ம குழந்தைகளுக்காகவும் நீங்க என்னென்னம்மோ செய்றீங்க, ஆனால் குழந்தைகள் கரைஞ்சிடிச்சு என்ற உண்மையை சொன்னால் நீங்க எப்படி தாங்க போறீங்களோ தெரியல" என நினைத்து நினைத்து அழுகின்றார்.

இவ்வாறாக இந்தப் ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றது.


Advertisement

Advertisement