• Sep 20 2024

மாட்டிக்கிட்ட ஈஸ்வரி.. அதிரடி முடிவெடுத்த குணசேகரன்.. அதிர்ச்சியில் மொத்தக் குடும்பம்.. பரபரப்பின் உச்சத்தில் 'எதிர்நீச்சல்' ப்ரோமோ..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான எதிர்நீச்சல். இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் நடக்கப்போவது என்ன என்பது குறித்து தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் தற்போது இன்றைய ப்ரோமோ வீடியோ வெளிவந்திருக்கின்றது. அதில் ஈஸ்வரி தனக்கு கொடுத்த கிப்ட்டை மறந்து வைத்து விட்டு வந்து விட்டார். உடனே கல்லூரியில் பணிபுரியும் ஆசிரியர் ஒருவர் எடுத்து வந்து ஈஸ்வரியிடம் கொடுக்க, அதனைக் கண்ட குணசேகரன் "யார்டா அது கிப்ட் எல்லாம் கொடுத்திட்டுப் போறாங்க" என குணசேகரன் கேட்க, ஈஸ்வரி மாட்டிகிட்டு முழிக்கின்றார்.


மறுபக்கத்தில் பின்னர் வீட்டில் எல்லோரும் ஒன்று கூட குணசேகரன் தான் ஒரு முக்கியமான முடிவை எடுத்திருப்பதாக சொல்கிறார். அதுமட்டுமல்லாது அப்பத்தா எங்கே என கேட்க அப்பத்தா நான் இங்கதான் இருக்கேன் என சொல்ல கீழே இறங்கி வா அப்பத்தா என குணசேகரன் கூறுகிறார். 


அதற்கு அப்புத்தா "நான் இங்க இருந்து கேட்கிறேன். விஷயத்தை சொல்" என அப்பத்தா கூறுகின்றார். குணசேகரன் தன்னுடைய முடிவை சொல்ல அதைக் கேட்டு கதிர், ஜனனி உட்பட அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.


இவ்வாறாக இந்தப் ப்ரோமோ வீடியோ வெளிவந்திருக்கின்றது.

Advertisement

Advertisement