தெலுங்கு சினிமாவில் கிளாமராக பல படங்களில் நடித்து வருபவர் அனுசுயா. அல்லு அர்ஜுன் நடிப்பில் சூப்பர்ஹிட் ஆன புஷ்பா படத்திலும் அவர் நடித்து இருந்தார். அடுத்து புஷ்பா 2 படத்திலும் அவருக்கு காட்சிகள் இருப்பதாக கூறப்படுகிறது.
அனுசுயா சமீப காலமாக அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எல்லைமீறும் அளவுக்கு கிளாமர் காட்டி புகைப்படங்கள் வெளியிட்டு வந்தார்.
இந்நிலையில் தற்போது அனுசுயா கண்ணீர் விட்டு கதறி வீடியோ வெளியிட்டு இருக்கிறார். அதை பார்த்து ரசிகர்கள் கடும் அதிர்ச்சி ஆகி இருக்கின்றனர்.
"சமூக வலைத்தளங்கள் எதற்காக உருவாக்கப்பட்டது தெரியுமா, அந்த விஷயங்களுக்காக தான் தற்போது பயன்படுத்துகிறார்களா."
"நான் எனது போட்டோஷூட் புகைப்படங்கள், மகிழ்ச்சியாக இருக்கும் பதிவுகளை வெளியிடுவது போல, இப்படி ஒரு நிலையில் இருக்கும் பதிவையும் வெளியிடுகிறேன். 5 நாட்களுக்கு முன் எடுத்த வீடியோ இது. இப்படி நலமாக இருக்கிறேன்" என குறிப்பிட்டு இருக்கிறார்.
இருப்பினும் அவர் இப்படி கதறி அழ என்ன காரணம் என்ன என்பதை கடைசிவரை அவரது நீண்ட பதிவில் குறிப்பிடவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருந்தாலும் என்னாச்சு என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
Listen News!