உதயநிதி ஸ்டாலின் தற்போது முழுக்க முழுக்க அரசியலில் இறங்கி விட்டதால், தன்னுடைய கடைசி திரைப்படம் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடித்து வரும் மாமன்னன் திரைப்படம் தான் என்பதை அறிவித்தார். இந்த படத்தின் சூட்டிங் பணிகள் அனைத்தும் முடிவடைந்து விட்டது.
தற்போது அடுத்த கட்ட பணிகள் மும்முரமாக ஆரம்பிதது நடைபெற்று வருகின்றது.அண்மையில் இப்படத்தின் டப்பிங் பணிகள் துவங்கி உள்ளதாக நடிகர் வடிவேலு டப்பிங் செய்யும் போது எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு அறிவித்திருந்தார் இப்படத்தின் இயக்குநர்.
மேலும் தற்பொழுது அரசியலில் அதின கவனம் செலுத்தி வரும் உதயநிதி தற்பொழுது கல்யாண நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு பேசிய விடயம் ஒன்று வைரலாகி வருகின்றது.
அதாவது தப்பு பண்ணி இருந்தால் பொண்டாட்டி காலில விழலாம் தப்பு கிடையாது. பொண்டாட்டி ,புருஷனுக்கிடையில் சண்டை வருவது இயல்பு தான். எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் உங்க சுயமரியாதையை விட்டுக் கொடுத்திடாதீங்க. என்று கூறியதோடு தனது திருமண வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!