தமிழ் சினிமாவில் 90களில் முக்கிய நடிகையாக வலம் வந்தவர் தான் சீதா. இவர் தமிழ் மலையாளம் ஆகிய மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்திருப்பதோடு இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளம் இருப்பதும் முக்கியமாகும்.
அத்தோடு இவர் ஆண் பாவம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகினார். தொடர்ந்து இவள் ஒரு பௌர்ணமி, குரு சிஷ்யன் என இதுவரை 60க்கு மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.இவர் பிரபல நடிகரும் இயக்குநருமான பார்த்தீபனைத் திருமணம் செய்திருந்தார்.
ஆனால் சில ஆண்டுகளுக்கு முதல் தனது கணவரை விவாகரத்து செய்து விட்டார். இந்த நிலையில் பிரபல சேனல் ஒன்றில் இவர் பேட்டியளித்த போது பார்த்திபனை விட்டு பிரிய காரணம் உங்களுடைய எதிர்பார்ப்பு தான் காரணம் என்று கூறப்படுகின்றதே அது பற்றி உங்களுடைய விளக்கம் என்ன என்று கேட்கப்பட்டது.
அப்போது சீதா நீங்க சொல்லுறது சரி தான் நான் ஒரு சராசரி சாதாரணமான பொண்ணு. பொதுவாகவே ஒரு புருஷன் கிட்ட பொண்டாட்டி எதிர்பார்க்கின்றதே உண்மையான அன்பு தான் அதுவே கிடைக்கலை என்றால் என்ன பண்ண முடியும் .இந்த எதிர்பார்ப்பு கட்டாயம் இருக்கத் தானே வேணும் என்று கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!