மூத்த நடிகரும் திரைப்படத் தயாரிப்பாளருமான பிரதாப் போத்தன் நேற்றைய தினம் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள அவரது குடியிருப்பில் தனியாக வசித்து வந்த நிலையில் தூக்கத்திலேயே அவரது உயிர்பிரிந்தது. அவரது மறைவுக்கு தமிழ்,மலையாளம், தெலுங்கு திரைப்பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்
பிரபல இயக்குநர் பரதன் மூலம் மலையாள சினிமாவில் தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கிய பிரதாப், மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி திரையுலகில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 12 படங்களை இயக்கிய பிரதாப் பேத்தன், முதல் படத்திலேயே தேசிய விருதையும் பெற்றார்.
அந்த வகையில் மலையான நடிகர் நிவின் பாலி தனது முகநூல் பக்கத்தில் பிரதாப் போத்தனுக்கு இரங்கல் தெரிவித்து ஒரு உருக்கான பதிவினை வெளியிட்டுள்ளார். அதில், போன வாரம் குட் பை சொன்னபோது, கடைசியாக இருக்கும் என்று நினைக்கவே இல்லை பிரதாப் சார். ரோஷன் சேட்டனின் படத்தில் உங்கள் மகனாக உங்களுடன் பணிபுரிந்தது ஒரு சிறந்த அனுபவமாகவும் கௌரவமாகவும் இருந்தது. உங்கள் அப்பாவி புன்னகை, மின்னும் கண்கள் மற்றும் அன்பான வார்த்தைகளுக்காக நான் எப்போதும் உன்னை நினைவில் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
இவரின் இறுதிச்சடங்கு இன்று நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு, மணிரத்னம் முதல் ஆளாக சென்று அஞ்சலி செலுத்தினர். மேலும், கமல்ஹாசன், பிசி ஸ்ரீராம், ராஜூவ் மேனன், நடிகை கனிகா, நடிகை பூர்ணிமா,ஒய்ஜி மகேந்திரன், கருணாஸ் ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்
- ஒரே நேரத்தில் உயிரை விட்ட ஜானகி, ராமன் தம்பதி.. செய்த சத்தியத்தால் பாரதி எடுத்த முடிவு – இன்றைய எபிசோட் அப்டேட்
- விருது விழாவுக்கு எல்லை மீறிய கவர்ச்சி உடையில் வந்த ராஷ்மிகா- வைரலாகும் வீடியோ
- பிரச்சனையின் முதல் கட்டமாக வாய் திறந்த கோபி; ராதிகா எடுத்த முடிவு – இன்றைய எபிசோட் அப்டேட்
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!