இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் கடந்த 2010- ஆண்டு வெளியான திரைப்படம் ஆயிரத்தில் ஒருவன். இந்த திரைப்படத்தில் பார்த்திபன், கார்த்தி, ஆண்ட்ரியா ரோமா சென் உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார்.
படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து. இரண்டாவது பாகத்திற்கான அறிவிப்பு கடந்த ஆண்டு வெளியானது .
அந்த அறிவிப்பில் நடிகர் தனுஷ் ஆயிரத்தில் ஒருவன் 2 படத்தின் முதன்மை கதாபாத்திரத்தில் நடிப்பார் என்றும் படத்திற்கான படப்பிடிப்பு 2024 ஆம் ஆண்டு தொடங்கும் அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், இது தனுஷின் எத்தனையாவது திரைப்படம் உருவாகும் என்பதை அறிவிக்கவே இல்லை.
தற்போது தனுஷ்வாத்தி திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து கேப்டன் மில்லர் படத்திலும் அவர் நடித்து வருகிறார்.
எனவே இந்த திரைப்படத்திற்காகவும் முடி நீளமாக வைத்துள்ளார் எனவே அதை கெட்டப்புடன் தான் அவர் ஆயிரத்தில் ஒருவன் இரண்டாவது பாகத்திலும் நடிப்பார் என தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதற்கிடையில், ஆயிரத்தில் ஒருவன் 2 அப்டேட் ஒன்று வெகு விரைவில் வெளியாகும் என செல்வராகவும் கூறியுள்ளார்.
Listen News!