தேனி மாவட்டம் வருசநாடு பகுதியைச் சேர்ந்த திரைப்பட இயக்குநரும் நடிகருமான ஜி. மாரிமுத்து சென்னையில் மாரடைப்பால் காலமானார். அதாவது இன்று காலை ‘எதிர் நீச்சல்’ சீரியல் டப்பிங் பணியில் பேசிக்கொண்டிருந்தபோது நடிகர் மாரிமுத்து திடீரென மயக்கம் போட்டு விழுந்தார்.
இதனையடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்கையில் அங்கு அவர் உயிரிழந்துள்ளார். இவரின் இறப்பு திரையுலகில் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கின்றது. இவரின் மறைவிற்கு பிரபலங்கள், ரசிகர்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இவரின் இறுதிச் சடங்குகள் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அந்தவகையில் மாரிமுத்துவின் இறுதிச்சடங்கு அவரின் சொந்த ஊரில் நாளை நடக்கிறது. அதாவது நாளை மதியம் 12 மணிக்கு அவரின் உடல் சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை அவரின் உறவினர்கள் செய்து வருகின்றனர்.
Listen News!