வனிதா தனது இளைய மகள் பற்றி சமீபத்திய பேட்டியில் விளக்கம் கொடுத்த விசயம் தற்போது வைரலாகி வருகின்றது.
வனிதா விஜயகுமார் என்றால் யார் கேட்டாலும் சொல்லுவார்கள் என்றளவிற்கு அவர் பற்றி ஒரே சர்ச்சசை கருத்து இணையத்தில் பரவி காணப்படும்.
இவ்வாறு இருக்கையில் இவர் நடிகையாக மட்டுமல்லாது தற்போது சொந்தமாக துணிக்கடை தொடங்கி பிஸ்னஸ் நடத்தி வருகின்றது. அவர் அது மட்டுமின்றி மேக்கப் உள்ளிட்ட பல விஷயங்கள் கவனித்து வருகிறார்.
மேலும் அவர் சமீபத்தில் தயாரிப்பாளர் ரவீந்திரன் மற்றும் சீரியல் நடிகை மஹாலக்ஷ்மி திருமணம் பற்றி சொன்ன கருத்தும் பரபரப்பானது. அது பற்றி அவர்கள் மாறி மாறி தாக்கி பேட்டி அளித்து வருகின்றனர்.அது ரசிகர்களுக்கு சுவாரிஸ்யத்தையே கொடுத்துள்ளது.
வனிதா பிக் பாஸ் வீட்டுக்குள் போட்டியாளராக வந்த போது அவரது இரண்டு மகள்களையும் வரவைத்திருந்தார். பல ட்ரோல்கள் சந்தித்தாலும் அவர் அம்மாவாக ஜெயித்துவிட்டார் என கமல்ஹாசன் அப்போது தெரிவித்து இருந்தார்.
வனிதா அவரது இரண்டு மகள்கள் உடன் வசித்துவந்த நிலையில், சமீப காலமாக அவரது இரண்டாம் மகள் போட்டோவை பதிவிவிடுவதே இல்லை. முதல் மகள் உடன் மட்டுமே போட்டோக்கள் வெளியிட்டு வருகிறார்.
இவ்வாறுஇருக்கையில் தற்போது வனிதா அளித்து இருக்கும் பேட்டியில் அவரது இளைய மகள் அவளது அப்பா உடன் ஹைதராபாத்தில் இருக்கிறார் என்கிற உண்மையை தெரிவித்து இருக்கிறார். வனிதா அவரை வலுக்கட்டாயமாக இங்கே வைத்திருக்கிறார் என முன்னாள் கணவர் ஆனந்த்ராஜ் போலீஸ் புகார் முன்பு அளித்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் அது தொடர்பாக வனிதாவிடம் பிக் பாஸ் வீட்டில் விசாரணை நடத்தப்பட்டதாக அப்போதே செய்திகள் வந்தது உங்களுக்கு நினைவிருக்கலாம்.
"அங்கேயே பள்ளியில் படிக்கும் அவள் பாதுகாப்பாக தான் இருக்கிறாள். இந்த வயதில் எப்போதும் ஒருவர் இருந்தாக வேண்டும். எப்போதும் அவளுக்கு நினைப்பு இங்கேயே தான் இருக்கும். அடிக்கடி பேசுவாள். நானும் சமீபத்தில் சென்று பார்த்துவிட்டு வந்தேன்" என வனிதா கூறியிருக்கிறார்.
Listen News!