• Sep 20 2024

குணசேகரன் எங்கே..? போலீசுடன் வந்த சக்தி... கதிருக்கு காத்திருந்த அதிர்ச்சி... விறுவிறுப்பான 'Ethirneechal' Promo..!

Prema / 11 months ago

Advertisement

Listen News!

சன் டிவியில் செம ஹிட்டாக ‘எதிர்நீச்சல்’ என்னும் சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. டி.ஆர்.பி ரேட்டிங்கிலும் இந்த சீரியலானது தொடர்ந்து முன்னணி வகித்து வருகின்றது. அந்த அளவிற்கு மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளது. 


இந்நிலையில் இந்த சீரியலில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடைபெறவுள்ளது என்பது குறித்த ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகி இருக்கின்றது. அதில் விசாலாட்சி வீட்டு மருமகள்களை பார்த்து "பழியைப் போட்டு எதுவுமே நடக்காத மாதிரி சமைச்சுக் கொண்டு வந்து வைக்கிறீங்க" எனத் திட்டுகின்றார்.


பதிலுக்கு ரேணுகா "இன்னும் பொங்கலையா..? நாங்க திங்க வேண்டாமான்னு வசனம் பேசியது இந்த வாய் தானே" என ஞானத்தை சாடுகின்றார். மேலும் மறுபுறம் விசாலாட்சி, நான் வீட்டுக்கு கிளம்பிட்டேன், வந்துகிட்டு இருக்கேன் எனக் குணசேகரன் கூறியதாக சொல்லி சந்தோஷப்படுகின்றார். 

அந்தசமயத்தில் சக்தி வீட்டிற்கு போலீசைக் கூட்டி வருகின்றார். நேராக கதிரிடம் சென்ற போலீஸ் "உங்க அண்ணன் குணசேகரன் எங்க" எனக் கேட்டு மிரட்டுகின்றனர். அதற்கு ஞானம் "என் அண்ணனைக் காணல என்று கம்ளைண் கொடுத்தார்களா" எனக் கேட்க பதிலுக்கு சக்தி ஆமா நான் தான் கொடுத்தேன் என்கிறார்.


இவ்வாறாக இந்தப் ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.

Advertisement

Advertisement