• Sep 20 2024

சமந்தா இருந்த இடத்தில் தற்போது 48 வயது நடிகை... விஷயம் அறிந்து கடுப்பான ரசிகர்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பிரபலமான முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை சமந்தா. இவர் கோலிவிட்டையும் தாண்டி இந்தியளவில் பிரபலமான முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராகியுள்ளார். கிட்டத்தட்ட தற்போது மூன்றுக்கும் அதிகமான பாலிவுட் படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.


சமந்தா நடிப்பில் உருவாகும் படங்கள் மட்டுமன்றி, சமந்தாவின் நடனத்தில் உருவாகும் பாடல்களும் ஹிட் தான் என்று கூறுமளவிற்கு நடனத்திலும் சிறந்து விளங்கி வருகின்றார்.

அந்தவகையில் கடந்த ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்ற பாடல்களில் ஒன்றாக 'ஓ சொல்றியா..' பாடல் அமைந்தது. 

இப்பாடல் ஆனது செம ஹிட் ஆகியுள்ளது. இவ்வாறு ஹிட்டாக முக்கியமான காரணமாக இருந்தது பாடலின் வரிகளைத் தாண்டி சமந்தாவின் நடனம் தான் எனப் பலராலும் புகழ்ந்து பேசப்பட்டது.


அந்தவகையில் புஷ்பா 1 இல் இப்பாடல் இடம்பெற்றதைத் தொடர்ந்தே இப்படம் சூப்பர்ஹிட் ஆனது. தொடர்ந்து புஷ்பா 2 விலும் அதே போல் ஒரு பாடலை வைக்க படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

இதனால் கட்டாயம் இப்பாடலிலும் சமந்தாவை நடனம் ஆட வைப்பார்கள் என்று ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் தற்போது ஒரு தகவல் வெளியாகி இருக்கின்றது. அதாவது புஷ்பா 2வில் இடம்பெறும் பாடலில் சமந்தா நடனம் ஆடவில்லை எனக் கூறப்படுகின்றது. இதில் சமந்தாவிற்கு பதிலாக பாலிவுட் நடிகை மலைக்கா அரோரா நடனம் ஆட போவதாக தெரிவிக்கின்றனர்.


ஆகவே புஷ்பா 2வில் சமந்தா இல்லை என்ற தகவல் வெளியானவுடன் ரசிகர்கள் பலரும் படக்குழுவினர் மீது கடுப்பாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement