• Sep 20 2024

எஸ்.ஜே.சூர்யா பொம்மைக்கு உயிர் கொடுத்தாரா..? இல்லையா..? 'பொம்மை' படத்தின் திரை விமர்சனம்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

ராதாமோகன் இயக்கத்தில்  எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி ஷங்கர், சாந்தினி உள்ளிட்ட பலரும் இணைந்து நடித்துள்ள திரைப்படம் 'பொம்மை'. இப்படத்தை எஸ்.ஜே. சூர்யா தயாரித்து நடித்துள்ளார். அதாவது பொம்மையுடன் காதல் என்ற வித்தியாசமான கதைக்களத்தில் இப்படம் உருவாகி உள்ளது. இந்நிலையில் இன்றைய தினம் வெளியாகியுள்ள இப்படத்தினுடைய திரை விமர்சனம் குறித்துப் பார்ப்போம்.

கதையின் கரு 

முதலில் கதைக்களம் குறித்து நோக்குவோம். அந்தவகையில் மன நல பிரச்சினைகளால் அவதிப்படும் நிலையில் பொம்மைகள் செய்யும் இடத்தில் வேலை பார்க்கும் ராஜூவுக்கு (எஸ். ஜே.சூர்யா) ஒரு குறிப்பிட்ட பொம்மை மேல் மட்டும் தீராக் காதல் உள்ளது. 

அந்தப் பொம்மையை தனது சிறு வயது காதலி நந்தினியாக (பிரியா பவானி ஷங்கர் ) நினைத்துக் கொள்கிறார். இதனையடுத்து அந்தப் பொம்மையை யாரிடமும் விற்று விட வேண்டாம் என தனது கம்பெனி சூப்பர்வைசரிடம் ராஜு தெரிவிக்கிறார். 

இந்நிலையில் குடும்ப நிகழ்வு ஒன்றிற்காக ஊருக்கு சென்று விட்டு திரும்பி வந்து பார்த்தால் குறித்த பொம்மை விற்பனை செய்யப்பட்டுள்ளதைக் கண்டு ராஜு அதிர்ச்சி அடைகிறார். இதனால் கோபத்தில்  சுப்ரவைசரை ஒரு வழி பண்ணிய ராஜு அவரின் இறப்பிற்கு காரணமாகின்றார்.

இதனைத் தொடர்ந்து ஒரு வழியாக விற்கப்பட்ட பொம்மையை ஒரு ஷோ ரூமில் இருந்து அவர் கண்டுபிடிக்கிறார். பின் அங்கேயே ராஜு வேலைக்கு சேர்கிறார். ஒருபக்கம் போலீசார் சூப்பர்வைசரின் இறப்பு பற்றி விசாரித்துக் கொண்டிருக்க, மறுபக்கம் தான் நினைத்த வாழ்க்கையை எஸ்.ஜே.சூர்யா பொம்மையோடு வாழ்ந்து சந்தோஷமடைகின்றார்.

பின்பு ராஜு போலீசில் சிக்கினாரா?.. பொம்மையுடன் அவர் நினைத்த வாழ்க்கை வாழ முடிந்ததா என்பதே இப்படத்தின் உடைய மீதிக்கதையாகும்.


நடிகர்களின் நடிப்பு 

இந்தப் படத்தின் உடைய பிரதான கேரக்டர் பொம்மை தான். 

அந்தவகையில் இதில் பிரியா பவானி ஷங்கர் பொம்மையாகவே மிளிர்கிறார். 

மேலும் எஸ்.ஜே.சூர்யாவின் வித்தியாசமான நடிப்பு படத்தை கொண்டு இழுக்கின்றது. அதிலும் குறிப்பாக போலீஸ் ஸ்டேஷன் விசாரணை காட்சிகளில் நடிப்பில் அசத்துகின்றார். 

அதேபோல் மற்றொரு ஹீரோயினாக நடித்துள்ள சாந்தினிக்கு பெரிய அளவில் காட்சிகள் இல்லை என்றாலும் தனது கேரக்டரை மிகவும் சிறப்பாக நடித்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்.


குறை, நிறைகள் 

இப்படமானது லாஜிக் இல்லாத ஒரு  கதை. எப்படி படமாக்கி இருக்கிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ட்ரெய்லர் வெளியான போதே ரசிகர்களுக்கு இருந்தது. இருப்பினும் பெரிய அளவில் அலட்டல் இல்லாத திரைக்கதை படம் பார்ப்பவர்களை ரொம்ப சலிப்படையவே செய்கிறது. 

அதேநேரத்தில் எஸ்.ஜே.சூர்யா - பிரியா பவானி ஷங்கர் தொடர்பான கற்பனை காட்சிகள் ரசிகர்களை பெரிதும் ரசிக்க வைக்கின்றன. அத்தோடு சிரிப்பையும் வரவழைக்கின்றது. 

இப்படமானது முதல் பாதியை விட இரண்டாம் பாதி சிறப்பாக உள்ளது.  கிளைமாக்ஸ் காட்சி எதிர்பாராத திருப்பமாக அமைந்துள்ளது.

அதேபோல் யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் பின்னணி இசையில் கலந்து வரும் ‘தெய்வீக ராகம்’ பாடலின் ஹம்மிங் ரசிக்க வைக்கிறது. 

தொகுப்பு 

மொத்தத்தில் எந்த வயதிலும் விளையாட்டு பொருளான 'பொம்மை’யை பார்த்தால் ரசிப்பவர்கள் இந்த ‘பொம்மை’ படத்தினையும் விரும்பிப் பார்த்தல் ரசிப்பார்கள் என்றுதான் கூறவேண்டும்.

Advertisement

Advertisement