அம்பிகா ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார். மேலும் அவர் தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். தற்போது நாயகி என்ற சீரியலில் நடித்து வருகிறார். அவரது சகோதரி ராதாவும் சமகாலத்தில் திரைப்பட நடிகையாகத் திகழ்ந்தார்.
இந்நிலையில் அம்பிகா தனது ட்விட்டரில் பாலியல் குற்றவாளிகள் தண்டிக்க பட வேண்டும் என்று நடிகை அம்பிகா வலியுறுத்தி உள்ளார். அதுமட்டுமல்லாமல் பாலியல் குற்றங்கள் உடல் ரீதியாகவோ, மன ரீதியாக இருந்தாலும் அந்த குற்றங்கள் தண்டிக்க பட வேண்டும் என கூறிஉள்ளார்.
மேலும் பாதிக்கப்பட்டவர் மைனராக இருந்தாலும் சரி 100வயது முதியவராக இருந்தாலும் சரி குற்றம் குற்றமே என்று தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இதற்கு சென்னை காவல்துறை நன்றி தெரிவித்து பதில் பதிவிட்டுள்ளது.
Listen News!