கன்னட நடிகர் யாஷ் நடிப்பில் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் KGF-2
தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி என பான் – இந்தியா படமாக KGF-2 வெளிவந்தது.மேலும் மாபெரும் எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம், தொடர்ந்து பல வசூல் சாதனைகளை படைத்து வருகின்றது.
இது ரசிகர்களிடத்தே பெரும் கொண்டாட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.இப்படத்தின் இரண்டாம் பாகம் ரூ 1000 கோடிகளுக்கு மேல் வசூல் செய்தது.
இந்நிலையில் அடுத்து ரசிகர்கள் கவனம் முழுவதும் KGF-3 பக்கம் திரும்பி இருக்கிறது. 2ம் பாகத்தின் முடிவில் வந்த காட்சிகள் எதிர்பார்ப்பை பல மடங்கு கூட்டி இருக்கிறது.
மேலும் மூன்றாம் பாகத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கப்படுமென தகவல் பரவியது, ஆனால் தயாரிப்பு நிறுவனம் ஷூட்டிங் தற்போதைக்கு தொடங்காதென தெரிவித்து உள்ளனர். இயக்குநர் பிரஷாந்த் நீல் அடுத்து பிரபாஸ், ஜூனியர் என்டிஆர் உடன் படங்களில் பணியாற்ற இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் KGF-3ல் வில்லனாக யார் நடிப்பார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்க ஒரு புது தகவல் உலா வருகிறது. பாலிவுட் நடிகர் ஹ்ரித்திக் ரோஷன் தான் KGF 3 வில்லனாக நடிக்க இருக்கிறார் என கூறப்படுகிறது.
Listen News!