• Sep 20 2024

தேர்தலில் வெற்றி பெற்றது யார்..? தந்தையை அசிங்கப்படுத்திய கோபிக்கு காத்திருந்த பேரதிர்ச்சி...பாக்கியலட்சுமி இன்றைய முழு எபிசோடு அப்டேட்

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல் தான் பாக்கியலட்சுமி தொடர்.விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் இத்தொடரின் இன்றைய எபிசோட்டில் என்ன நடக்கப்போகின்றது என்பதை பார்ப்போம்....

 தேர்தலில் பாக்யாவை ஜெயிக்க வைக்க தாத்தா இராமமூர்த்தி பிரச்சார வசனங்களை எழுதிக் கொண்டிருக்க அப்போது வரும் கோபி இந்த வீட்டில் உக்காந்துட்டு உங்க மருமகள் ஜெயிக்கணும்னு முயற்சி பண்ணிட்டு இருக்கீங்க அவ ஜெயிக்கனும்னு நினைச்சா அங்க போய் பண்ணுங்க என கையில் இருந்த நோட்டைப்பிடுங்கி தூக்கியெடுக்கிறார்.

இதன் பிறகு ராதிகா நீ ஒன்னும் கவலைப்படாத கண்டிப்பா நீ தான் ஜெயிப்ப என சொல்லிவிட்டு ஆபீஸ்க்கு கிளம்ப இனியா அம்மா தான் ஜெயிப்பாங்க என்ன சொல்கின்றார். ராதிகா உங்க டாடி இருக்க வரைக்கும் அவருக்கு ஃபேவரா பேசிட்டு இப்போ மாத்தி பேசுற என கேட்க இனிய நான் எங்க அம்மா எங்க அப்பா ரெண்டு பேருக்கும் பேவர் தான் என சொல்கிறார்.


அடுத்து பாக்கியா ராஜசேகரை சந்தித்து தனக்கு பணம் கிடைக்கவில்லை அதனால் இந்த ஆர்டரை எடுத்து செய்வது கஷ்டம் என கூறி மன்னிப்பு கேட்க அவர் தொழிலில் எப்போதும் முன் வைத்த காலை பின் வைக்கக் கூடாது உங்களுக்கு பணம் தானே பிரச்சனை? நான் உங்களுக்காக கையெழுத்து போட்டா உங்களுக்கு லோன் கிடைக்கும் எல்லோ என சொல்ல பாக்கியா சந்தோஷப்பட்டு அவருக்கு நன்றி கூறுகிறார். அவரும் வாழ்க்கையில் நல்லபடியா ஜெயிக்கணும் என வாழ்த்துக்கூறி அனுப்பி வைக்கிறார்.

அதன் பிறகு  ஏரியா செக்ரட்டரி எலக்சனுக்காக எல்லோரும் ஒன்று கூடி இருக்க பிறகு தேர்தல் ஆரம்பமாகிறது. கிட்டத்தட்ட 800 குடும்பங்கள் உள்ள ஏரியாவின் ஓட்டு போடும் நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடக்கிறது பிறகு கோட்டை எனும் போது முதலில் ராதிகா 112 ஓட்டுக்கள் பெற்றிருப்பதாக சொல்ல கோபி கைதட்டி சந்தோஷப்படுகிறார்.


ராதிகா ஓட்டு ரொம்ப கம்மியா இருக்க மாதிரி தெரியுது என சொல்ல இல்ல உன்ன விட கம்மியா தான் வாங்கி இருப்பா நீ தான் ஜெயிப்ப என சொல்ல அடுத்து  பாக்கியா 1100க்கும் அதிகமான ஓட்டுக்களை பெற்று வெற்றி பெற்று இருப்பதாக அறிவிக்க கோபி அதிர்ச்சி அடைகிறார். இல்ல ஏதோ தப்பு நடந்து இருக்கு நீங்க ஓட்ட சரியா எண்ணல ராதிகா தான் ஜெயிச்சு இருக்கணும் என கோபி சத்தம் போட அதெல்லாம் சரியாத்தான் எண்ணி இருக்கோம் என ஓட்டு எண்ணிய அதிகாரி பதில் கொடுக்கிறார்.


அதன் பின்னர் பாக்யாவை கடைக்கு கூப்பிட்டு சால்வை அணிவித்து அவரை பேச சொல்கின்றனர். எனக்காக ஓட்டு போட்டு என்னை ஜெயிக்க வைத்த உங்க எல்லோருக்கும் நன்றி என பாக்யா நன்றி கூறுகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.


Advertisement

Advertisement