தமிழ் சினிமாவில் இன்று நடிப்பின் நாயகனாக வலம் வந்துகொண்டிருப்பவர் சூர்யா. அவர் இந்த அளவுக்கு தலைசிறந்த நடிகராக உருவெடுக்க முக்கிய காரணமாக இருந்த இயக்குனர் என்றால் அது பாலா தான். இவர் பாலா இயக்கத்தில் நடித்த நந்தா மற்றும் பிதாமகன் ஆகிய இரு படங்கள் தான் சூர்யாவை ஒரு தரமான நடிகராக்கியது.
இதனால் சூர்யா - பாலா இடையே நெருங்கிய நட்பும் உருவானது. இதன் காரணமாக தான் பாலா இயக்கத்தில் ஆர்யா - விஷால் நடித்த அவன் இவன் படத்தில் கூட நடிகர் சூர்யா கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். இந்த நிலையில் இவர்களின் கூட்டணியில் உருவாகி வந்த திரைப்படம் தான் வணங்கான்.
இப்படத்தின் ஷூட்டிங் கடந்த மார்ச் மாதம் கன்னியாகுமாரியில் தொடங்கியது. அங்கு வணங்கான் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை ஒருமாதம் நடத்தினர். அப்போது நிறுத்தப்பட்ட படப்பிடிப்பு அதன்பின் நடக்கவே இல்லை. படத்தின் கதையில் சில மாற்றங்களை பாலா செய்து வருவதாக கடந்த சில மாதங்களுக்கு முன் தகவல் வெளியானது.
ஆனால் அந்த மாற்றங்கள் சூர்யாவுக்கு செட் ஆகாது என்பதால் அவரை இப்படத்தில் இருந்து விலகிக் கொள்ளுமாறு அறிவுறுத்தியதாகவும், அதனால் சூர்யா இப்படத்திலிருந்து விலகிவிட்டதாகவும் நேற்று முன்தினம் பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
இந்த நிலையில் சூர்யா இப்படத்திலிருந்து விலகியதற்கான உண்மைக் காரணத்தை பிரபல பத்திரிகையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது பாலா படப்பிடிப்பில் பாலா எப்போதும் மிருகங்களை நடத்துவது போலவே நடிகர்களை நடத்துவார்.மிகவும் கடுமையான முறையிலேயே நடத்துவார்.
அவருக்கு சூர்யா எவ்வோ பெரிய இடத்திற்கு வந்து விட்டார் என்று தெரியாத மாதிரியே அவரை நந்தா படத்தில நடத்தினது போலவே அந்தப் படத்திலையும் நடத்தினால் எப்படி பிடிக்கும்.அதனால் தான் அவர் பாலா சரி வர மாட்டாங்க என்று விலகிட்டாங்க என்று புதிய தகவலைத் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!