• Sep 21 2024

விவாகரத்திற்குப் பின் கையில் புது மோதிரத்துடன் சமந்தா.. யாரு போட்டிருப்பாங்க..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் சமந்தா. 'விண்ணைத்தாண்டி வருவாயா' என்ற படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்த சமந்தா, அதனைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு மொழிகளில் அடுத்தடுத்த படங்களில் நடித்து டாப் நடிகையாக திகழ்ந்து வருகிறார். இவர் நடிப்பில் தற்போது சாகுந்தலம் என்ற படம் வெளியாகவுள்ளது. 


சமந்தா கடந்த 2017இல் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருப்பினும் கடந்த 2021 ஆம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக 4 ஆண்டு திருமண வாழ்க்கையை விவாகரத்து பெற்று இவர்கள் இருவரும் முடித்துக்கொண்டனர். 


அதன் பின்னர் கடந்த 8 மாதங்களாக சமந்தாவின் உடல் நிலை மோசமாகியதோடு 4 மாதங்களாக மயோசிடிஸ் என்ற அரியவகை நோயால் பாதிக்கப்பட்டு இருந்ததோடு, அதனால் எழுந்து கூட நடக்க முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டும் இருந்தார். அதற்காக வெளிநாடடு சென்று சிகிச்சை பெற்று தற்போது ஹைதராபாத்தில் இருக்கும் தனது வீட்டில் தங்கியிருக்கிறார்.


இந்நிலையில் தற்போது சமந்தா பாம்பு மோதிரம் ஒன்றினை தனது கையில் போட்டிருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டா ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார். பல ஆண்டுகள் கழித்து சமந்தாவின் கையில் புதிய மோதிரத்தை பார்த்த ரசிகர்கள், ஆன்மீக மோதிரமா? இல்லை வேறொருவர் போட்ட மோதிரமா என்று கருத்துக்களை கூறி வருகிறார்கள்.


Advertisement

Advertisement