தமிழ் திரையுலகில் பிரபல நகைச்சுவை நடிகராக இருந்து வருபவர் யோகி பாபு.நடிகர்கள் ரஜினி, விஜய், அஜித், சிவகார்த்திக்கேயன், தனுஷ் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள யோகி பாபு, தற்போது தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகராக வலம் வருகிறார்.இந்நிலையில் இவர் பற்றி திடீரென புகார் ஒன்று எழுந்துள்ள நிலையில் தற்போது இவர் பேசிய ஆடியோ ஒன்று லீக்காகி உள்ளது.
இவர் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள திரைப்படம் 'தாதா'. இப்படத்தில் இவருடன் இணைந்து நிதின் சத்யாவும் நடித்துள்ளார்.மேலும் இப்படத்திற்கு கின்ன்ஸ் கிஷோர் என்பவர் கதை, திரைக்கதை, வசனம் என்பன எழுதி இயக்கி உள்ளார். வித்தியாசமான கதையம்சம் நிறைந்ததாக உருவாகி உள்ள இப்படம் வருகிற டிசம்பர் 9-ஆம் தேதி ரிலீசாக உள்ளது. அத்தோடு இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த சில வாரங்களுக்கு முன் ரிலீஸ் செய்யப்பட்டு இருந்தது.
அந்தப் போஸ்டரில் யோகிபாபுவின் புகைப்படம் தான் இடம்பெற்று இருந்தது. இதனைத் தொடர்ந்து இந்த படத்தில் தான் 4 சீனில் தான் நடித்ததாகவும், தயவு செய்து தன்னை வைத்து விளம்பரம் செய்ய வேண்டாம் எனவும் கூறி ட்விட்டர் வாயிலாக ரசிகர்களுக்கு தெரிவித்து இருந்தார் யோகிபாபு.
யோகிபாபுவின் இந்த செயலால் கடுப்பான தாதா திரைப்படத்தின் இயக்குநர் கிஷோர் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். அதாவது இப்படத்தின் உடைய இசை வெளியீட்டு விழா சென்னை வடபழனியில் நடைபெற்றது. அங்கு பேசுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் இயக்குநர் கின்னஸ் கிஷோர் பேசுகையில் யோகிபாபு திரைப்படத்தில் நடிக்க தடைவிதிக்க வேண்டும் எனவும் கூறி இருந்தார்.
அத்தோடு "தாதா திரைப்படத்தில் நடிக்கவில்லை என யோகிபாபு ட்வீவீட் செய்தாலும், அதுகுறித்து கவலையில்லை. தாதா படத்தை எந்த தயாரிப்பாளரும் வாங்கவிடாமல் தடுத்ததால், யோகிபாபு மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளதாக இயக்குநர் கிஷோர் தெரிவித்தார்.
இந்நிலையில் தற்போது யோகி பாபு பேசிய ஆடியோ ஒன்று வெளியோகி உள்ளது.அதில் யோகி பாபு கூறுகின்றார்...நான் நேர்மையாக இருக்கிற நடிகன்.நீ சம்பாதிக்கிறதிற்கு ஏன் என் முகத்தை போட்டு மக்களை ஏமாத்துகிறாய்.நான் தாதா படத்தில் நடிக்கவில்லை.நான் நடித்த படம் மணி.அவர் எங்களை பிரச்சனையில் சிக்க வைப்பதற்காக மாத்தி போட்டு இருக்கிறார்.நான் மணி படத்திற்காக மட்டுமே வேலை செய்தேன்.தாதா என்ற டைட்டில் எனக்கு தெரியாது எனக் கூறியுள்ளார்.
Listen News!