• Sep 20 2024

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே வெளியேறியது ஏன்?- முதன் முறையாக உண்மையை உடைத்த ரக்ஷன்

Aishu / 2 years ago

Advertisement

Listen News!


கலக்கப் போவது யாரு என்னும் நிகழ்ச்சியில் சீசன் 5 இல் தொகுப்பாளராக களமிறங்கியவர் தான் ரக்ஷன்.

அதனைத் தொடர்ந்து KPY சாம்பியன்ஸ், KPY 6,7 ஆகிய நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும், ஜோடி Fun ஆல்டிமேட் நிகழ்ச்சியின் போட்டியாளராகவும் பங்கேற்றார்.

இவ்வாறு சின்னத்திரையில் வலம் வந்த ரக்ஷன், தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் வெளிவந்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தல் படத்தின் மூலம் வெள்ளித்திரையில் நடிகராக அறிமுகம் ஆனார்.

இதனைத் தொடர்ந்து மூன்று சீசன்களாக குக் வித் கோமாளியில் தொகுப்பாளராக பணியாற்றி வந்த இவர் 3வது சீசனின் இறுதி நிகழ்ச்சியில் காணவில்லை, காரணம் என்ன என்பதே தெரியவில்லை.

இதுகுறித்து ஒரு பேட்டியில் ரக்ஷனிடம் கேட்க, அதற்கு அவர், இறுதி நிகழ்ச்சியின் போது எனக்கு கடுமையான ஜுரம், கொரோனா தொற்று இருக்குமோ என்று பார்த்தால் அதுவும் இல்லை. பின் தனிப்பட்ட சில காரணங்களுக்காக என்னால் இறுதி நிகழ்ச்சியில் வர முடியவில்லை என கூறியுள்ளார்.


Advertisement

Advertisement