• Sep 20 2024

குக் வித் கோமாளியில் இருந்து திடீரென மணிமேகலை விலகியது ஏன்?- கொந்தளித்து புகழ் சொன்ன விஷயம்

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியில் எதிர்பாராத பல திருப்பங்கள் நடந்து கொண்டிருக்கிறது. முதல் எலிமினேஷன் ஆக கிஷோர் வெளியேற்றப்பட்டது சோசியல் மீடியாவில்  பல்வேறு சர்ச்சைகளை எழுப்பியது. அதை தொடர்ந்து கடந்த வாரத்தில் வீஜே விஷால் மற்றும் மைம் கோபி இருவரும் டேஞ்சர் சோனில் இருந்தனர். அத்தோடு இவர்கள் இருவரில் யார் வெளியேறுவார்கள் என்று பெருத்த எதிர்பார்ப்பும் பரபரப்பும் இருந்த நிலையில் கடைசி நேரத்தில் இவர்கள் இருவரும் அசத்தலாக சமையல் செய்திருப்பதால் இவர்கள் இருவரும் இந்த வாரம் காப்பாற்றப்பட்டு எலிமினேஷன் இல்லை என்று அறிவித்திருந்தனர்.

2019 இல் தொடங்கிய முதல் சீசனில் இருந்து நீங்கள் எனக்கு குக் வித் கோமாளிக்காக அதிக அளவு அன்பை பொழிந்து கொண்டிருக்கிறீர்கள். அதற்கு நான் நன்றி கடன் பட்டிருக்கிறேன். எனக்கு கொடுக்கப்படும் வாய்ப்புகளில் நான் எப்போதும் பெஸ்ட் ஆக இருக்க அதிக அளவு efforts போட்டு இருக்கிறேன். உங்களை entertain செய்ய கொஞ்சம் justice செய்து இருக்கிறேன். உங்களிடம் இருந்து எதிர்பார்க்காத அளவு அன்பு கிடைத்தது. அத்தோடு அது நான் செய்யும் மற்ற விஷயங்களிலும் இருக்கும் என நம்புகிறேன் என்று பதிவிட்டு இருந்தார்.


இந்த நிலையில் சற்றும் எதிர்பார்க்காத விதமாக கோமாளியாக கடந்த நான்கு சீசன்களாக கோமாளியாக இருக்கும் மணிமேகலை திடீரென தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் பதிவு வெளியிட்டு இருந்தார். அதில் தான் இந்த நிகழ்ச்சியை விட்டு வெளியேறி இருப்பதாக அதில் தெரிவித்து இருந்தார். நீண்ட பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார்.



இந்த நிலையில் ரசிகர்கள் அதிகமாக சமூக வலைத்தளத்தில் எதனால் மணிமேகலை திடீரென வெளியேறினார் என்று கேள்வி எழுப்பி வரும் நிலையில், மணிமேகலையோடு நிகழ்ச்சியில் இருக்கும் போட்டியாளர்களும் அவருடைய நண்பர்களும் பல பிரபலங்களும் தொடர்ந்து மணிமேகலைக்கு வாழ்த்து கூறி வருகிறார்கள். காரணம் அடுத்து மணிமேகலை செய்ய போகும் செயல் வெற்றியடைய வேண்டும் என்றும் அடுத்த கட்ட முயற்சிக்கு ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள்

அண்மையில் ஒரு பட நிகழ்ச்சிக்கு சென்றுள்ள புகழிடம் மணிமேகலை வெளியேறியது குறித்து கேட்டுள்ளனர். அதற்கு அவர், நீங்கள் எல்லோரும் அவர் கர்ப்பமாக இருப்பதால் வெளியேறினார் என கூறுகிறீர்கள், அது உண்மையாக இருந்தால் சந்தோஷம் தான்.என்ன காரணம் என்பதை நிஜமாக தெரிந்துகொண்டு பதிவிடுங்கள், மற்றபடி மணிமேகலை தான் இதுகுறித்து கூற வேண்டும் என தெரிவித்திருக்கிறார்.


Advertisement

Advertisement