மணிரத்னத்தின் இயக்கத்தில் வெளியான கடல் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகியவர் தான் கௌதம் கார்த்திக். இவர் கடந்த 2019ம் ஆண்டு முத்தையா இயக்கத்தில் வெளியான தேவராட்டம் படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் கதாநாயகியாக மஞ்சிமா மோகன் நடித்திருந்தார்.
இப்படத்தின் மூலம் நண்பர்களாக இருந்து காதலர்களாக மாறிய இவர்கள் அண்மையில் தான் சமூக வலைதளத்தில் தங்கள் காதல் குறித்து அறிவிப்பு வெளியிட்டனர்.
இந்நிலையில் இன்று கௌதம் கார்த்திக், மஞ்சிமா மோகன் திருமணம் சென்னையில் நடைபெறுகிறது. அதில் இரு வீட்டாரும், நெருங்கிய நண்பர்களும் கலந்து கொள்கிறார்கள்.திருமணம் முடிந்த கையோடு வரவேற்பு நிகழ்ச்சி நடக்கும் என்று இவர்கள் அண்மையில் அறிவித்திருந்தனர்.
ஆனால் இன்று வரவேற்பு நிகழ்ச்சி நடக்காதாம். திருமணத்திற்கு முன்பு போட்டோஷூட் நடத்தினார்கள், ஜோடியாக மீடியாவை சந்தித்து பேசினார்கள். ஆனால் வரவேற்பு நிகழ்ச்சி மட்டும் ஏன் இல்லையாம் என ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.ஆனால் அவர்கள் தரப்பிலிருந்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!