• Sep 20 2024

40 வயதுக்கு மேல் திருமணம் செய்துகொண்டது ஏன்?- முதன் முதலில் ரசிகர்களுக்கு உண்மையை கூறிய நடிகை.!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

சூர்யவம்சம் படத்தின் மூலம்  திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை லாவண்யா தேவி. 90களில் பல தமிழ் படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். அதன்பின், ரஜினியின் படையப்பா படத்தில் சிறியகதாப்பாத்திரத்தில்  நடித்திருந்தாலும் ரசிகர்களின் கவனம் ஈர்த்தார்.

இதனைத் தொடர்ந்து, ஜோடி, சேது போன்ற படங்களிலும் நடித்துள்ளார். திருமலை, வில்லன், எதிரி, ரன், சமுத்திரம், சுந்தரா டிராவல்ஸ், நான் தான் பாலா உட்பட 100-க்கும் மேற்பட்ட படங்களில் சப்போர்டிங் கேரக்டரில் கலக்கி வந்தார்.

அதனையடுத்து சினிமாவில் இருந்து சின்னத்திரை பக்கம் திரும்பினார். தற்போது சன் டிவி-யின் அருவி சீரியலில் லட்சுமி என்ற கதாபாத்திரத்தில் மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளார்.


இவ்வாறுஇருக்கையில், லாவண்யா, பிரசன்னா என்பவரை திருப்பதியில் மணந்துள்ளார். . அவரது திருமண புகைப்படங்கள் வெளியாக 44 வயதில் நடிகையின் திருமணம் என செய்திகள் பரவின.

தனது திருமணம் குறித்து லாவண்யா ஒரு பேட்டியில் கூறும்போது, நடிப்பில் கவனம் செலுத்தியதால் திருமணம் அப்படியே தள்ளிக்கொண்டு போய்விட்டது.ன்னுடைய குடும்பம் தான் எனக்கு மிகப்பெரிய பலம், ஏன் இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை என்ற கேள்வியை நான் எதிர்கொண்டதே இல்லை என்றிருக்கிறார்.


அதேபோல் தனக்கு 44 வயது ஒன்றும் இல்லை 43 தான் ஆகிறது என்று தெரிவித்துள்ளார்.


Advertisement

Advertisement