தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் முன்னணி நடிகராக உயர்ந்து நிற்பவர் தான் சிவகார்த்திகேயன். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமும் உள்ளது. இவரது நடிப்பில் இறுதியாக பிரின்ஸ் என்னும் திரைப்படம் வெளியாகி கலவையாக விமர்சனங்களையே பெற்றது.
இதனை அடுத்து ‘மண்டேலா’ புகழ் மடோன் அஷ்வின் இயக்கத்தில் மாவீரன் என்னும் படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தில் கதாநாயகியாக நடிகை அதிதி சங்கர் நடித்து வருகின்றார். இப்படத்தின் 80 சதவீதமான படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.
இந்த நிலையில் நடிகர் அஜித்தின் தந்தை உடல் நலக்குறைவு காரணமாக இறப்புக்குள்ளானார். இந்த செய்தி குட்டு நடிகர் விஜய் சூர்யா கார்த்தி சிம்பு ஆகியோர் அஜித் வீட்டிற்கு நேராகச் சென்று இரங்கல் தெரிவித்திருந்தனர்.
மேலும் தந்தையாரின் இறுதிச் சடங்கில் சிவகார்த்திகேயனின் மனைவி ஆர்த்தி மட்டுமே கலந்து கொண்டிருந்தார்.சிவகார்த்திகேயன் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளவில்லை. இது குறித்து சிவகார்த்திகேயன் கூறியுள்ளார். அதாவது அந்த டைம்ல எனக்கு ஷுட்டிங் இருந்திச்சு அதனால தான் வைப் தனியாப் போனாங்க.ஷுட்டிங் முடிஞ்சதுக்கு பிறகு நான் நேர்ல போய் பேசிட்டு வந்தேன் என்றும் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!