• Sep 20 2024

'இதை ஏன் பெரிய சர்ச்சையாக்க வேண்டும்' -மகேஷ்பாபுவின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்த கங்கனா ரனாவத்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தெலுங்கு சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் மகேஷ் பாபு . இவரது நடிப்பில் நேற்றைய தினம் வெளியாகிய சர்காரு வாரிபாட்டா திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இப்படத்தில் கதாநாயகியா கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார்.

இப்படத்தை முன்னிட்டு சமீபத்தில் சந்தித்திருந்தார். அப்போது நிறைய ஹிந்தி படங்களில் நடிக்க எனக்கு வாய்ப்பு வந்தது. ஹிந்தி படங்களில் நடித்து எனது நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. தெலுங்கு சினிமாவிலேயே எனக்கு நட்சத்திர அந்தஸ்தும், ரசிகர்களின் பேரன்பும் கிடைத்துள்ளது. அதைவிடுத்து இன்னொரு மொழியில் நடிப்பது பற்றி நினைப்பது கூட இல்லை. தெலுங்கிலேயே பெரிய படங்கள் பண்ணவேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை” எனக் கூறினார்.

இவரின் இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் தற்போது அதற்கு மகேஷ் பாபு விளக்கம் அளித்துள்ளார். அதில் “தான் எல்லா மொழி படங்களையும் நேசிக்கிறேன். எல்லா மொழிகளையும் மதிக்கிறேன். நான் இப்போது பணிபுரியும் இடத்திலேயே தொடர்ந்து பணியாற்றுவதையே சௌகர்யமாக உணர்கிறேன் என்று கூறியிருந்தேன். அது வேறுவிதமாக பரவி விட்டது” எனக் கூறி விளக்கம் அளித்தார்.

இவரின் இந்த கருத்துக்கு பாலிவுட் நடிகையான கங்கனா ரனாவத் ஆதரவு தெரிவித்துள்ளார். இது சம்மந்தமாக அவர், “ மகேஷ் பாபுவின் கருத்தை அவர் தன்னுடைய துறை சார்ந்த மரியாதையை வெளிப்படுத்திய விதமாகவே எடுத்துக் கொள்ள வேண்டும். அவரது தலைமுறை தெலுங்கு சினிமாவை இந்தியாவின் நம்பர் 1 திரைப்படத் துறையாக மாற்றியுள்ளது.

இப்போது, ​​பாலிவுட் நிச்சயமாக அவருக்கானதை வழங்க முடியாது. இதை ஏன் பெரிய சர்ச்சையாக்க வேண்டும் என்று தெரியவில்லை’’ என்று ஆதரவாக தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement