• Sep 21 2024

திருமணத்திற்கு நயன்தாரா அம்மா ஏன் வரவில்லை- தீடீரென கொச்சி பறந்த ஜோடி..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பல ஆண்டுகள் காதலர்களாக வலம் வந்த விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் கடந்த 9 ஆம் தேதி மகாபலிபுரத்தில் உள்ள ஷேர்டன் ஹோட்டலில் பிரமாண்டமாக திருமணம் இடம்பெற்றது.

இந்த நிகழ்ச்சியில், முன்னணி திரைப் பிரபலங்கள் கலந்துகொண்டனர். அழைப்பிதல் கொடுக்கப்பட்டவர்களுக்கு அனுப்பப்பட்ட கியூ ஆர் கோட்டை காட்டிய பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில், நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதியினர் திருமணம் முடித்து இருவரும் திருமலை திருப்பதி கோவிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்துகொண்டனர்.

நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதியர் திருமணத்திற்கு முன் பல கோடி மதிப்புள்ள பரிசுகளைப் பரிமாறிக் கொண்டதாகவும் தகவல் வெளியானது. மேலும் அதில், விக்னேஷ் சிவன் பல கோடி மதிப்புள்ள தங்க நகைகளை பரிசளித்ததாகவும், பதிலுக்கு நயன் தாரா விக்னேஷ் சிவனுக்கு ரூ.20 கோடி மதிப்புள்ள புதிய பங்களா ஒன்றை பரிசாக வழங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், புதுமணத் தம்பதியினர், திருமணத்திற்கு பிறகு முதன்முறையாக கேரளா சென்றுள்ளனர்.

மேலும் கொச்சி விமான நிலையத்தில், நயன்தாராவும் விக்கியும் நடந்து செல்லும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.

நயன்தாராவின் தாயாரின் உடல்நிலை சரியில்லாததால் அவர் திருமணத்திற்கு வரவில்லை என்று கூறப்படுகிறது.இதனால் அம்மாவிடம் ஆசி பெறுவதற்காக இருவரும் கேரளா சென்றுள்ளனர்.

இன்னும் சில நாட்கள் கேரளாவில் உள்ள நயன்தாராவின் சொந்த வீட்டில் இருவரும் தங்கி இருப்பார்கள் என்று கூறப்படுகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement